Monday, October 31, 2016

கொதிக்கும் நண்பர்களுக்கு!!


நண்பர்களே வணக்கம்,
                எங்கள் முக நூல் பக்கங்களை முடக்கிய நண்பர்களுக்கு நன்றி. முதலில் இந்த வலை பூ ஆரம்பிக்கப்பட்டதற்கான காரணத்தை விளக்கிறோம், அனைத்து மக்கள் போல் எங்களுக்கும் பேலியோவின் மீதி மிக அதிக காதல் முன்னர் இருந்தது, அதை  நாங்கள்  பின்பற்றியதுடன் மட்டுமில்லாமல் எங்கள்  நண்பர்கள் அனைவருக்குமே பரிந்துரைத்து  வந்தோம். நாளடைவில் பல ஆராய்ச்சி கட்டுரைகள் படித்தபோது , அனைத்திலும் பொதுவாக பட்டது , அசைவ உணவுகள் தொடர்ச்சியாக எடுப்பது மிகவும் ஆபத்து என்று. ஆனால் பேலியோ குழுவில் இது பற்றி விவாதிக்கும் பொருட்டு சில கேள்விகளை எழுப்பினோம்? ஆனால் எங்கள் post கள் குழுவில் பிரசுரிக்க மறுக்கப்பட்டன. பேலியோவின் தீமைகள் பற்றிய  எந்த ஒரு  செய்தியும் பிரசுரிக்க படுவதே இல்லை. மேலும் இது பற்றி வினா எழுப்பியவர்கள் அதிரடியாக குழுவில் இருந்து நீக்க பட்டார்கள்.

குழுவில் நன்மை தீமை இரண்டுமே விவாதிக்க பட வேண்டும், அதற்கு தகுந்தாற்போல் நம் உணவு முறைகளை மாற்றி கொள்ள வேண்டும். எதையும் ஒரு தலை பட்சமாக பார்ப்பது தவறு.  நன்மைகளை பேசும் அதே சமயம் தீமைகளும் விவாதிக்க பட வேண்டும். எங்கள் வலை பூவில் கேள்வி கேட்க தொடங்கிய  பிறகு தான், சிக்கனில் கிட்னி,கல்லிரல் போன்றவை உண்ண  கூடாது, கிட்னி பிரச்னை உள்ளவர்கள் 50-60 கிராம் புரதம் மட்டுமே எடுக்க வேண்டும் என அந்த குழுவில் டயட் முறைகளை மாற்றி உள்ளார்கள். 50-60 கிராம் ப்ரோடீன் உணவு பேலியோ டயட்டில் சாத்தியமா?

மேலும் பேலியோ மனிதர்கள்  தானியங்கள் உண்ணவில்லை இல்லை என்று எப்படி உறுதியாக  சொல்கிறீர்கள்? அமிலேஸ்( Amylase) gene  எணிக்கை எப்படி 10 ஆனது, சிம்பாஞ்சிகளுக்கு 2 மட்டுமே இருந்தது? 30000 ஆண்டுகள் முன் கிடைத்த தானியம் அரைக்கும் கற்கள் பற்றிய கருத்து, அதிக முட்டை உண்டால் வரும் ப்ரோஸ்டேட் (prostate ) கான்செர் பற்றிய கருத்து,அதிக விலங்கு புரதம்,அதிக யூரிக் ஆசிட்,பின் கிட்னி செயலிழப்பு?  போன்றவை உங்கள் குழுவில் பிரசுரிக்க இல்லை.மேலும் நாங்கள்  இந்த கேள்வி கேட்டதால் நாங்கள் நாய்களை போல குழுவில் இருந்து விரட்டி அடிக்க பட்டோம். பேலியோ வை புகழ்பவர்கள் மட்டுமே குழுவில் இருங்க முடிந்தது.


பேலியோ எடை குறைக்க அதிக பட்சம் 3 மாதங்கள் மட்டுமே பின்பற்றக்கூடிய கூடிய நல்ல உணவு முறை. ஆனால் அது நீரிழிவு நோய் ,பிரஷர்  போன்ற நோய்களுக்கு நிரந்தர தீர்வாகாது என்பது எங்கள் வாதம்.இதன் பின் விளைவுகள் ஏராளம்.நாங்கள்  ஏதோ கார்ப்பரேட் கைக்கூலிகள் அல்ல, மிக மிக சாதாரணமா மனிதர்கள் (common men ), நாங்களும் உங்கள் நண்பர்களே , எங்களுக்கு அந்த குழுவில் விவாதிக்க இடம் தரறதே இந்த வலை பூ , தீமைகள் பற்றி விவாதிக்க ஒரு தளம். நியாண்டெர் செல்வன் மீது மிக பெரிய மரியாதை கொண்டவர்கள் நாங்கள் , தமிழக மக்களுக்கு உடலியல் மற்றும் நோயியல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தியதில்  அவர் பங்கு நிச்சயமாக போற்ற  பட வேண்டியது. ஆனால் அதற்காக  அவர் சொல்லும் அனைத்து கருத்துக்களுக்கும் "ஆமாம்" போட முடியாது. சில எதிர் விவாதங்கள் கட்டாயம் தேவை படுகின்றன.கட்டாயம் அதை அவரும் விரும்புவர் என எண்ணுகிறோம். நாங்கள்  அவருக்கு எதிரி அல்ல, அவர் சொல்லும் சில கருத்துக்களுக்கு மட்டும் தான்.. நீங்களே சொல்லுங்கள், எதிர்மறை வினாக்களோடு எதாவது ஒரு post-ஐ உங்கள் குழுவில் பார்த்து இருக்கறீர்களா?  LCHF மிகவும் நல்ல உணவு முறை, இதை நாங்கள் தவறு சொல்ல வில்லை , ஆனால்  அதற்காக பரிந்துரைக்க படும் சில உணவு பொருள்களுக்கு தான் எதிர்ப்பு.

பண்ணை கோழியை அவர் மக்களை உண்ண மிகவும் ஊக்கம் அளிக்கிறார். அது தவறு என யாரும் வாதிட கூடாது என நீங்கள் எண்ணுகிறீர்களா?
மட்டன்  கிலோ 500 ரூபாய், ஒரு வாரம் பழையது ஆனாலும் ஹோட்டல்களில் அதை வெளியே தூக்கி வீச மாட்டார்கள் ,சூடு செய்து அப்படியே தான் வாடிக்கையாளர்களுக்கு கொடுப்பார்கள். தினமும் பேலியோ டயட் எனும் பெயரில் சிக்கன்,மட்டன் என உண்ணும் நண்பர்களின் நிலை என்ன? இது பற்றி யாரும் எதுவும் சொல்ல கூடாதா?
 50 வருடங்கள்  முன் நம் தாத்தா பாட்டி ஆரோக்கியமாக இருந்தார்களே  ஏன் அவர்களை விட்டு 1000 வருடங்கள் முன் வாழ்ந்த அமெரிக்க ஆதிவாசிகளை உதாரணமாக சொல்கிறீர்கள் என கேட்க கூடாதா ?

நன்மை தீமை இரண்டும் சம அளவில் விவாதிக்க பட வேண்டும் , அப்போது தான் உண்மையான கருத்துக்கள் கிடைக்கும்.

இது யார் மீதும் காழ்ப்புணர்ச்சி கொண்டு எழுத படும் வலைப்பூ அல்ல, இதனால் எங்களுக்கு மிகவும் நேர விரயம் தான் , இதில் என்ன லாப நோக்கம் இருக்க முடியும்?

இது நன்மை தீமைகளை விவரிக்கும் ஒரு தளமே. இங்குள்ள கேள்விகளுக்கு  குகுளில் தேடி பார்த்து பதிலளியுங்கள், நாங்கள் தவறென்றால் ஒப்பு கொள்கிறோம். தனிப்பட்ட விமர்சனங்களால் ஒரு பலனுமில்லை, நல்ல கருத்துடன் வாருங்கள் ஆரோக்கியமான விவாதம் செய்வோம்.

டயட் நிறுத்தம் - நமக்கு முதல் வெற்றி

டயட் நிறுத்தம் - நமக்கு முதல் வெற்றி

ஒரு முக்கிய பேலியோ குழு , இன்று முதல் தாங்கள் டயட் சொல்வதை முற்றிலும் நிறுத்துவதாக அறிவித்துள்ளது. கட்டாயமாக இது பல மக்களின் உயிரை கான்செர் போன்ற  கொடிய  வியாதிகளிடம் இருந்து காப்பாற்றும் என்பதில் மாற்றமில்லை. இவர்கள் டயட் சொல்லுவதை நிறுத்த,மிரட்டல் விடுவதாகவும், கார்ப்பரேட்களின் சதி என்றும் பல புனை கதைகள்  கட்டுக்களாக  அவிழ்த்து விட்டுள்ளார்.

ஆனால்  உண்மை வேறு.  உண்மையில், உணவியல் பற்றிய போதிய அறிவில்லாமல், அரசாங்க அனுமதி இல்லாமல் , நோயாளிகளுக்கு டயட் வழங்குவது  சட்டப்படி தவறு.இவர்கள் வழங்கும் டயட்டில் நோயாளிகளுக்கு ஏதவாது  நேர்ந்தால், சட்டப்படி டயட் வழங்குபவர்களே அதற்கு பொறுப்பாவர்கள்  என பின் வரும் வலைப்பூவில்  இன்று விளக்கி இருந்தோம். இதை படித்த பின்னர் ஏற்பட்ட பயத்திலேயே, இந்த குழு பின் பின்வாங்கி ஏதோ  கார்பெரேட் சதி   அது இது என்று  கதை பேசுகிறது.

http://paleov2.blogspot.in/2016/10/trends.html

இவர்கள் செய்யும் செயல் நேர்மையானதாக இருந்தால் களத்தில்  இறங்கி போராடலாமே , ஏன் தப்பித்து ஓட பார்க்கின்றனர். சட்டப்படி  காவல் துறையில் முறையிடலாமே ? வழக்கு தொடுக்கலாமே?

ஏன் செய்யவில்லை ?

பேலியோ 2.0 காலை டயட் 1

இது நமது பாட்டன்,பூட்டன்களின் உணவு முறை , 1000 ஆண்டுகள் முன் அமெரிக்க ஐரோப்பிய கண்டங்களின் ஐஸ் மலையில் பச்சை மீன்களை தின்று உயிர் வாழ்ந்த பழங்குடி மக்களின் டயட் முறை அல்ல, நமது கண் முன்,ரத்தமும் சதையுமாக 50,60 ஆண்டுகள் முன் ஆரோக்கியமாக வாழ்ந்த நமது தாத்தா பாட்டிகளின் எளிய உணவு முறை.  இந்த டயட் பின்பற்றினால் சுகர்   சடாரென குறையாது,பிரஷர் சடாரென குறையாது,தலையில் உடனடியாக ஒரு வாரத்தில் அதிகம் முடி முளைக்காது, ஆனால் பின் விளைவுகள் ஏதும் இன்றி,ஆரோக்கியமாக நீண்ட நாள் வாழலாம். ஆனால் இதை தொடர்ச்சியாக பின்பற்றினால் சர்க்கரை,பிரஷர் போன்றவை எதுவும் வராது,உடல் நன்றாய் வலுப்படும் ,தேகம் மிக பொலிவுறும்.

எந்த உணவு முறையை பின்பற்றினாலும் , உடல்பயிற்சி மிக மிக அவசியம். காலையில் உடல்பயிற்சி சிறிது நேரம் செய்வது மட்டுமின்றி , நாள் முழுதும் நமது பணியில் ,ஏதவாது ஒரு வகையில்  உடல் பயிற்சியை கொண்டிருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும். நீங்கள் அமிர்தமே உண்டாலும் , ஒரு மணி நேரமாவது உடல் பயிற்சி இல்லை என்றால் , அதன்  பயன் உங்களுக்கு கிடைக்காது.


காலை டயட்
----------------
1. ராகி களி இரண்டு உருண்டை, தயிர் அல்லது  ஏதெனும் ஒரு கீரை சேர்த்து.

ஒரு கிலோ ராகி 35 ரூபாய் மட்டும், ஒரு கிலோவில் நான்கு  வேலை ஒரு நபர் சாப்பிடலாம்.  இதை பின்பற்ற பொருளாதாரம் ஒரு தடையாய்  இருக்காது.
ராகி மானாவாரியாக விளைவது, ஒரு துளி அளவு கூட பூச்சி மருந்தோ,உரங்களோ இல்லை.
விலை குறைவாக இருப்பதால் , கலப்படம் ஒன்றும் செய்ய முடியாது.
இரண்டு ராகி களி  உண்டால் , 5 மணி நேரத்திற்கு சுத்தமாக பசிக்காது,எதுவும் உண்ணவும் தோணாது.
இது செய்வது முதலில் கொஞ்சம் கடினமாக இருக்கும் ஆனால் இரண்டு நாட்களில் பழகி விடும்.
கார்போஹைட்ரெட் அளவு அரிசியை விட சிறிதுதான் குறைவு, இருந்தாலும் ,புரதம், கொழுப்பு, இரும்புச்சத்து, நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், தயமின் போன்ற மற்ற சத்துக்களை அதிகமாக கொண்டுள்ளது.
ராகி கூழாக குடிக்க கூடாது , ஏனென்றால் அது எளிதில் ஜீரணமாகி மீண்டும் பசியை தூண்டும். எனவே களியாகவோ , ரொட்டி போன்றோ செய்து சாப்பிடலாம்.
உடல் எடை குறையும், ஆனால் உடனடியாக அல்ல.
மித்தியானைன் (Methionine) என்ற அமிலத்தை கொண்ட தானியம் ராகி மட்டுமே, இது கல்லிரல் தொடர்பான அனைத்து நோய்க்கும் சரியான மருந்து,மேலும் கல்லிரல்  வீக்கம், fatty லிவர் போன்றவற்றை இந்த உணவு முறை எளிதில் சரி படுத்தும்.
சர்க்கரை நோயாளிகளுக்கு நீண்ட நாள் தொடர்ச்சியாக எடுக்க கூடிய நல்ல உணவு, சர்க்கரையின் அளவை முழுமையாக கட்டுப்படுத்த முடிய விட்டாலும், ஓரளவு சிறப்பான நிலையில் சர்க்கரையின் அளவை இதனால் வைத்திருக்க முடியும்.

30000 வருடங்கள் முன்

கடைசியாக லோரன் கோர்டைன் (Loren Cordain) 2002 ம் வருடம்  தி பேலியோ டயட் (The Paleo Diet) என்ற புத்தகத்தை எழுதிய போது  பேலியோதிக் காலத்தில் வாழ்ந்த நம் முன்னோர்கள் , தானியங்கள் உண்டார்களாக இல்லையா என்பது  ஒரு நம்பக தன்மை இன்றி ஒரு அனுமானத்திலே தானியங்கள் அவர்கள் உண்டிருக்க வாய்ப்பில்லை தன் கருத்துக்களை பதிவு செய்திருக்கிறார். விவசாயம் தோண்டியது  10000 வருடங்களுக்கு முன்பு தான் என பல்வேறு ஆய்வுகள், தெரிவித்திருந்த நிலையில், விவசாய காலத்திற்கு முன் தானியங்கள் விளைவித்து உண்ண  வாய்ப்புகள் இல்லை என்ன கருத்தை கொண்டே, தானியங்கள் பேலியோ காலத்தில் உண்ணப்படவில்லை என கூறப்பட்டு வந்தது.

ஆனால் சமீபத்திய ஆராய்ச்சியில் கிடைத்த தகவல்களான ,அமிலஸ் ஜீன் (amylase gene)  எண்ணிக்கை பத்துக்கு மேல் கொண்ட நம் முன்னோர்கள் உடல் படிமங்களும், உலகின் அனைத்து பகுதிகளுக்கும் பரவி கிடந்த தொல் பொருள்களான 33000 ஆண்டுகள் முதல் 100000 ஆண்டுகள் பழமையான தானியங்கள் அரைக்கும் கற்களும், மனிதன் தானியங்கள்  பேலியோ காலத்திற்கு பல ஆயிரம் வருடங்கள் முன்பே மனிதன் தானியங்கள் உண்ண  துவங்கி விட்டான் என்பதை தெளிவாக காட்டுகிறது.

எனவே பேலியோ காலத்தில் மனிதன் தானியங்கள் உணவில்லை என்பது , ஒரு நிருபனமற்ற , கற்பனையான ஒரு செய்தி. தானியங்கள் உணவில்லை என்பதை நிரூபணம் செய்வதை விட, தானியம் உண்டான் என நிரூபணம் செய்ய பல புதிய ஆராய்ச்சி தகவல்கள் உள்ளன.


இதை பற்றி ஆஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள ஆராய்ச்சி கட்டுரை மற்றும் நியூயார்க் டைம்ஸ் நாளிதழின் கட்டுரையின் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.நேரமிருந்தால் இதை படித்து மேல்சொன்ன  கருத்துக்களை உறுதிபடுத்தி கொள்ளுங்கள்.

http://sydney.edu.au/news-opinion/news/2015/08/10/starchy-carbs--not-a-paleo-diet--advanced-the-human-race.html
http://www.nytimes.com/2015/08/13/science/for-evolving-brains-a-paleo-diet-full-of-carbs.html?_r=0
http://www.telegraph.co.uk/foodanddrink/foodanddrinknews/11798169/Did-cavemen-eat-carbs-Why-the-paleo-diet-could-be-wrong.html

இதிலிருந்து தெரியவருவது பேலியோ மனிதரும் அதற்கு முந்தையவருக்கும் மாவு சத்துள்ள உணவுகள் புதிதல்ல.

33000 வருடங்கள் முன்பு உபயோகித்த தானியம் அரைக்கும் கற்கள் பற்றிய விளக்கங்கள்
http://www.nature.com/news/2010/101018/full/news.2010.549.html
http://www.npr.org/sections/thesalt/2015/09/14/440292003/paleo-people-were-making-flour-32-000-years-ago
http://theplate.nationalgeographic.com/2015/09/11/ancient-oat-discovery-may-poke-more-holes-in-paleo-diet/

பண்ணை கோழியும் பரலோக பயணமும் 2

ரோக்ஸர்சோன் (Roxarsone) , இது பண்ணை கோழிகளின் தீவனத்தில் கோழிகளின் அதீத வளர்ச்சிக்கும் , கொழுத்த எடை பெறவும், நோய் எதிர்ப்பு சக்திற்கும் முக்கியமாக பயன்படுத்தப்படும் ஒரு ஊக்க மருந்து , இந்த ஊக்க மருந்து செய்ய பயன்படும் முக்கிய மூலப்பொருளாக உபயோக படுத்தப்படுவது இரசாயன நச்சுப் பொருள் ஆர்சனிக்(Arsenic). இந்த ஆர்சனிக், ரோக்ஸர்சோன் ஊக்க மருந்துகளில் மட்டுமின்றி அனைத்து வகையான ஆன்டி பயாடிக் மருந்துகளிலும் பெரும்பான்மையாக காணப்படுகிறது.. இந்த ஆர்சனிக் மாசுபாடுள்ள தண்ணீர் , அதில் விளையும் தானியங்கள் போன்றவற்றிலும் காணப்படுகிறது ஆனால் இது அதிக தீங்கற்ற ஆர்கானிக் வகையை சார்ந்ததாகும் . ஆனால் ரோக்ஸர்சோன்-ல் உள்ள ஆர்சனிக் மிகவும் கொடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் இன்-ஆர்கானிக் வகையை சார்ந்ததகும். இது 2014ம் வருடம் இதன் விளைவுகளை உணர்ந்த அமெரிக்க உணவு & மருந்து கட்டுப்பாட்டு தலைமை (FDA), அமெரிக்கர்கள் உண்ணும் 70% சிக்கன் உணவுகளில் கேன்சரை உண்டாக்கும் ஆர்சனிக் உள்ளது என பகிங்கரமாக அறிவித்து ,இந்த வகை மருந்துகளை அதிரடியாக தடை செய்தது.


http://www.fda.gov/AnimalVeterinary/SafetyHealth/ProductSafetyInformation/ucm257540.htm http://www.msn.com/en-ca/foodanddrink/foodnews/finally-the-fda-admits-that-nearly-over-70percent-of-us-chickens-contain-cancer-causing-arsenic/ar-AA8cWca



 ஆனால் இந்தியாவில் இதுவரை ரோக்ஸர்சோன் கோழி பண்ணைகளில் இந்த வகை மருந்துகள் உபயோகிப்பது இன்னும் தடை செய்யப்படவில்லை. பெரிய பண்ணை கோழி அதிபர்களிடம் , கோழி வளர்க்கும் ஒப்பந்தம் போட்டுள்ள விவசாயிகளை இந்த கம்பெனிகள் அவர்களிடமுள்ள தண்ணீரின் உப்பின் தன்மை,காற்றோட்டமுள்ள பண்ணை அமைப்பு, அவர்கள் கோழிகளை வளர்க்கும் முறை போன்றவற்றை கருத்தில் கொண்டு கோல்ட்,டயமண்ட்,சில்வர் என விவசாயிகளை தரம் பிரித்து வைத்துள்ளனர் . இதில் டைமோண்ட் வகை விவசாயிகள் வளர்க்கும் கோழிகள் மட்டுமே வெளி நாட்டு ஏற்றுமதிக்கு அனுப்பப்படும், டைமோண்ட் வகை கோழிகளுக்கு கொடுக்கப்படும் தீவனம் மற்ற கோழிகளிடமிருந்து மிகவும் வேறுபட்டது. எந்த நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறதோ, அந்த நாட்டின் தர கட்டுப்பாட்டின் விதி முறைக்கு ஏற்ப , இவற்றின் தீவன மூல பொருட்கள் மாற்றி அமைக்கபட்டிருக்கும். மிகவும் புத்திசாலிதனமாக கோழியின் கல்லிரல்,கிட்னியில் தான் இந்த மருந்துகள் தங்கி இருக்கும், அதனால் கோழியின் இறைச்சியில் ஒன்றும் இருக்காது என தனக்கு தானே ஆறுதல் கூறி கொணடு இறைச்சி மட்டும் தின்னலாம் என்று நினைக்க வேண்டாம்.இந்த ஆர்சனிக் நச்சு தன்மை ஒரு கிலோ கோழி இறைச்சியில் 6 மைக்ரோ கிராம் அளவு சாதாரணமாக காணப்படுகிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.. அமெரிக்கா புற்றுநோயாளிகளின் இடத்தில முன்னிலையில் இருப்பதட்கு இந்த ஆர்சனிக் எனும் நச்சு பொருளே மிக முக்கிய காரணமாக இருக்கும் எனவும் இது 20 வருடங்கள் முன்பே தடை செய்ய பட்டிருக்க வேண்டும் என்றும் உணவு துறை வல்லுநர்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

Sunday, October 30, 2016

உலகம் ஒதுக்கிய பேலியோ உனக்கெதுக்கு ?

பேலியோ டயட் பற்றி மேலை நாடுகளின் கூகுள் ட்ரெண்ட் (google trend ) 2004 வருடத்திலிருந்து இன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ளது . ஏறக்குறைய அனைத்து நாடுகளும் கிட்னி நோய்கள்,கான்செர் ஆகிய பாதிப்புகளால் பேலியோவின் தீமை கருதி, மயக்கத்திலிருந்து தெளிந்து பேலியோவை ஒதுக்கி தள்ளி விட்டன. ஆனால் இங்கு இப்போதுதான் மயக்கம் ஆரம்பித்திருக்கிறது. இன்னும் சில மாதங்கள் ஆகும் இது முற்றிலும் தெளிய. USA (அமெரிக்கா)


அமெரிக்கா (USA)
-----------------------------

ஐரோப்பிய நாடுகள் (UK)
-----------------------------


ஆஸ்திரேலியா (Australia)
-----------------------------

{"exploreQuery":"date=all&geo=GB&q=paleo%20diet"});


இந்தியா (India)
-----------------------------


மேற்கணட வரை படங்களில் அனைத்து மேலை நாடுகளும் மலை ஏறி அதன் தீமை உணர்ந்து கீழே இறங்கி கொண்டு இருக்கிறார்கள் , ஆனால் இங்கு நமது ஆட்கள் இப்போது தான் தம் கட்டி மேலே ஏறி கொண்டு இருக்கிறார்கள், ஒரு சிலர் மேலை நாடுகளில் போனியாகாத இந்த பேலியோ சரக்கை பட்டி,டிங்கரிங் பார்த்து நமது ஊருக்கு தகுந்தாற்போல் மாற்றி உலவ விட்டு அழகு பார்க்கிறார்கள். எப்படி இருந்தாலும் இன்னும் 6 மாதம் தான், எப்படியும் ஒரு 4 பேலியோ கண்மணிகளாவது மண்டையை போடுவார்கள், அதற்கு அட்மின்கள்  பதில்  சொல்லியே ஆகவேண்டும் . பொறுப்பு துறப்பு என போட்டு கொண்டு தகவல் மட்டும் தருவது என்பது வேறு , திருமண மண்டபங்கள் வாடகைக்கு எடுத்து டயட் தருகிறேன் என மக்களை தூண்டி இந்த மாய வலைக்குள் இழுத்து சாகடிப்பது என்பது வேறு. இது பற்றி தமிழ்நாடு உணவியல் துறை செயலர் அவர்களிடத்தில் ஏற்கனவே பல மனுக்கள் , பல்வேறு தன்னார்வ அமைப்புகளால் கொடுக்கப்பட்டுள்ளது. விரைவில் இதன மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.இவர்கள் டயட் கொடுத்து யாரேனும் பாதிக்க பட்டால் , போலி டாக்டர்களை தண்டிக்கும் அதே சட்டத்தின் கீழ் இவர்கள் தண்டிக்க படுவார்கள் எனவும் வக்கீல் ஒருவருடன் பேசியபோது , அவர் கருத்தை தெரிவித்தார்.

பேலியோடா....கான்சர்டா.....


அதிக புகை பிடித்தல் காரணமாக வாய் (oral,oesophageal cancer  ) மற்றும் உணவுகுழாய் புற்றுநோய் ஆகியவற்றில் இந்தியா முதலிடத்தில் இருந்தாலும் மற்ற புற்று நோய்களில் வகைகளில் (கல்லிரல்,கணையம்,மூளை,விதைப்பை,தோல்)  உலகின் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில்   இந்தியா ஏறக்குறைய கடைசி இடத்திலேயே  இருக்கிறது. இதற்கு முக்கிய காரணமாக கருதபடுவது நமது அன்றாட உணவில் பயன்படுத்தப்படும் மசாலா  பொருள்களும் , குறைவான அசைவ உணவுகளை கொண்ட   நமது அன்றாட உணவு பழக்கவழக்கங்கள் தான்.(https://www.ncbi.nlm.nih.gov/pubmed/14597785).



நம்மை அறியாமலேயே நாம் தினசரி உணவில் கடுகு,மஞ்சள்,சீரகம்,பட்டை,கிராம்பு,மிளகு,வெந்தயம்,மிளகாய் தூள் போன்றவற்றை நாம் எடுத்து கொள்வதுதான் , நாம் இந்த  பட்டியலில் கடைசியில் இருக்க காரணம். ரசம் , பொரியல்,குழம்பு என எது சமைத்தாலும் இந்த மாசாலா  பொருட்கள் கட்டாயம் இருக்கும். இதுவே நமக்கும் தெரியாமல்  நம்மை பலவகையான கான்சர் நோய்களிலிருந்து நம்மை காப்பாற்றி வருகிறது.  



ஆனால் இந்த தற்காலிக எடை குறைப்பு பேலியோ உணவுமுறை நமது அடிப்படை ஆணிவேரையே ஆட்டி பார்க்கும்  ஒன்றாக இன்று சில போலிகளால் உருவெடுத்து நிற்கிறது. இந்த பேலியோ உணவுமுறையில் இந்த மசாலா பொருள்கள் முற்றிலுமாக ஒதுக்கப்படுகிறது , சில சப்பை கட்டுகளுக்கு ,பசுமஞ்சள்,கெபிர் போன்றவை  ஊக்குவிக்கபடுகிறது . 1000 மடங்கு ஆக்ஜிசன் அதிகம் என்று புதியதாக பசு மஞ்சள் மார்க்கெட் வேறு . அறிவிலி மக்களுக்கு தாங்கள் உண்ணும் உணவில் உள்ள மஞ்சள் தூளிலுள்ள குறுகுமின் (curcumin) அளவே மிகவும் போதுமானது  என்பது தெரியாது. யாராவது ஒருவர் ஏதாவது  புதிதாக சொன்னால், அவர்கள் பின்னாலேயே சிறிதளவும் ஆராய்ச்சி இல்லாமல் ஓட வேண்டியது.. உறுதியாக சொல்ல முடியும் பேலியோ பின்பற்றும் 80 சவிகிதம் மக்கள், இன்னும் 2 அல்லது 3 வருடங்களில் புற்று நோயாளிகளாக இருப்பார்கள்.

இன்று #prostate cancer எனப்படும் விதைப்பை புற்றுநோய் மிக அதிகமாக நகர்ப்புற மற்றும் கிராமப்புற  மக்களிடையே அதிகமாக பரவலாக தென்பட ஆரம்பித்துள்ளது. இந்தியாவில் அனைத்து நகர்ப்புறங்களில் உள்ள பெரிய மருத்துவமனைகளிலும் prostate கான்சர்க்கு தனியாக பிரிவுகள் அமைக்கும் அளவு இந்த புற்று நோய் பரவி வருகிறது..முட்டையில் உள்ள கோலின் ( choline) என்ற பொருள் இந்த வகை புற்று நோய்க்கான மிக முக்கிய காரணியாக இருக்கிறது என பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. முட்டை அதிகமாக உண்டால் தற்காலிகமாக சர்க்கரை அளவு குறையும்,உடல் எடை குறைக்கலாம் ,ஆனால் பின் விளைவாக சில ஆண்டுகளில் புற்று நோயளிகளாக வாய்ப்புகள் மிக அதிகம்.

வாரம் 5 முட்டைகளுக்கு அதிகமாக உண்டாலே இந்த வகை கான்செர் வருவதற்கு வாய்ப்புகள் மிக மிக அதிகம் ,ஆனால் இந்த பேலியோ குழுக்களில் தினசரி 5 முட்டைகள் உண்ண மக்கள் அறிவுறுத்த படுகிறார்கள்.அதிக முட்டைங்கள் உட்கொள்ளும் வழக்கமே , இந்த விதைப்பை மற்றும் பிறவகை கேன்சருக்கு முக்கிய காரணம்.  இவர்கள் நிலைமையை இன்னும் சில வருடங்களில் என்னவாகும் என்று நினைத்து பார்த்தால், கண்ணீர் சிந்துவதை தவிர வேறு வழி இல்லை. எடை குறைக்க உயிர் இழக்கும் இந்த மடையர்களுக்கு கண்ணீர் சிந்துவதும் கூட வீண் தான். ஆனால் அவர்களை நம்பி இருக்கும் குடும்பம் தான் வருத்தத்திற்குரியது.

ஆத்தா நான் டாக்டர் ஆகிட்டேன்.


பேலியோ என்பது மேலை நாடுகளில் பல வருடங்களாக பின்பற்றப்படும் ஒரு எடை குறைப்பு டயட் அதுவும் , மிக குறுகிய காலத்திற்கு மட்டுமே பின்பற்ற அறிவுறுத்த படும் ஒரு டயட் . இதை கொண்டு நீரிழுவுக்கு நிரந்தர தீர்வு ,பிரஷர்க்கு நிரந்தர தீர்வு  , வழுக்கையில் முடி வளர வைப்பது , போன்ற  மாய ஜால கவர்ச்சி செய்திகளை  ஒரு பேலியோ குழுமத்தில் விளம்பரபடுத்த பட்டுகொண்டுள்ளது.இவை குறுகிய காலத்திற்கு சற்று நற்பலன்களை தந்தாலும் , நீண்ட காலத்திற்கு பின்பற்றினால் கிட்னி செயலிழப்பு,கான்செர் போன்ற கடும் விளைவுகளை  உண்டாக்கும் என பல ஆராய்ச்சி கட்டுரைகள் மற்றும் மருத்துவ நூல்களின் மேற்குறிப்பின் மூலம் முடிந்தவரை இந்த வலை பூவில் விளக்கி  வருகிறோம்.

ஒரு முகநூல் குழுவில்  பத்தாம் வகுப்பு படித்த ஒரு குழு நபர், நீரிழிவு நோயின் கடுமையான தாக்கத்தில் இருக்கும் ஒரு நோயாளிக்கு உணவு முறைகளை பரிந்துரை செய்கிறார். ஒருவர் தன்  சொட்டை தலையில் பேலியோவால் முடி முளைத்ததை படத்துடன் விளக்குகிறார்.குழுவில் உள்ள ஓரிரு மருத்துவர்கள் ரூபாய் 1000 பெற்று கொண்டு தனியாக டயட் சொல்கிறேன் பேர்வழி என மக்களை தங்கள் மருத்துவமனைக்கு அழைத்து வாடிக்கையாளர்களாக மாற்றி வருகிறார்கள். இந்த குழுவில் இருந்து  பிரிந்து சென்ற பலர், அங்கங்கு பேலியோ கிளைகள் துவங்கி ,தங்களால் முடிந்த சேவைகளை  மக்களுக்கு அளித்து வருகிறார்கள்( மக்கள் மேல் தான் எவ்வளவு அக்கறை இவர்களுக்கு). அந்த தனி கிளை பேலியோ குழுக்களை ஒழிக்கும் பொருட்டு,  முக்கிய  பேலியோ  குழு அட்மின்கள் அந்த குழு மட்டுமே பேலியோ டயட் வழங்க வேண்டும் வேறு யாரும்  பேலியோ டயட் வழங்கினால் நம்ப வேண்டாம் என அனைவரையும் கேட்டு கொள்கிறார்.  ஏன் இவர்கள் மட்டும் தான் மக்கள்  சேவை ஆற்ற வேண்டுமா? அந்த தனிகிளை குழுக்கழும் சேவை செய்யட்டுமே அதில் இவர்களுக்கு என்ன பிரச்சனை? நோயற்ற சமூகத்தை உருவாக்க அவர்களும் தான் பாடுபடட்டுமே?  பேலியோவே ஒரு டுபாகூர் டயட் , அதில் இவர்களுக்குள் நான் தான் டயட் சொல்வேன் , நீ சொல்லக்கூடாது என இவர்களுக்குள் சண்டை வேறு.இவர்கள் சண்டையில் பலியாவது அறிவில்லாத இந்த மக்கள் தான். எந்த தகவல் யார் சொன்னாலும், கூகுலில் 5 நிமிடம் தேடினால் , அதன் உண்மை நிலை அறிந்து கொள்ளலாம். அது கூட செய்யாத இவர்கள் சோம்பேறிதனமே , திருமண மண்டபங்களில் 10 வது படித்தவர்களிடம் டயட் கேட்க நாள் முழுதும் வரிசையில் நிற்கும் நிலைக்கு தள்ளி இருக்கிறது.

பேலியோ டாக்டர் ஆவது எப்படி ?

முதலில் நோயாளிக்கு எனன ஆனாலும் உங்களுக்கும் நீங்கள் பரிந்துரைக்கும் இந்த  டயட்க்கும் சம்பந்தம் இல்லை என்று ஒரு பேப்பரில் எழுதி  கையெழுத்து வாங்கி கொள்ளுங்கள்.

டயட் சொல்வது மிகவும் எளிது

நோயாளியை ரத்த பரிசோதனை எடுக்க சொல்லுங்கள்   ( Thyrocare only )
ரத்த பரிசோதனைகளை முடிவுகளை ஒன்றும் பார்க்கவேண்டாம், பின்வரும் டயடை, யார் எந்த நோய் என்று வந்தாலும் கண்ணை முடி கொண்டு பின் பற்ற சொல்லவும்.

5 முட்டை காலை உணவு
100 பாதாம் மத்திய உணவு
வேண்டும் அளவு சிக்கன்,மட்டன்,மீன்,பீப்  என எது வேண்டுமானாலும் இரவு உணவு
கெபிர்,காய் காய்கறிகள் இடையிடையில் உண்ணவும்

அவ்வளவு தான் .நீங்கள் இப்போது பேலியோ டாக்டர். யாரவது அதிக விலங்கு ப்ரோடீன் எடுத்தால் , யூரிக் ஆசிட் அதிகமாகும் ,கிட்னி செயலிழப்பு என முட்டாள் தனமாக கேள்வி கேட்டால்,அவர்களை unfriend செய்து விடவும். யாராவது ஏமாளியாக இருந்தால் 10000 வருடங்களுக்கு முன்பே நமது மரபணுவில் யூரிக் ஆசிட் அதிகமானால் கிட்னி தன்னை தானே சரி செய்து கொள்ளும் தன்மையை பெற்று விட்டது என கூறி  சில புரியாத ஆங்கில கட்டுரை லிங்க்களை  விடவும், நோயாளி ஒன்றும் பேச மாட்டார்.  

"ஐயா  நான் 30 நாட்களாக பேலியோ பின்பற்றுகிறேன் , இடது புறம் நெஞ்சு சற்று வலிப்பது போல் உள்ளது" என யாராவது வந்தால்,
உடனடியாக " இதற்கும் எனக்கும் சம்மதமில்லை" எனக்கூறி unfriend  செய்து விட்டு எஸ்கேப் ஆகவும்.

 இன்னும் உங்கள் சேவையை விரிவாக்க  விரும்பினால், குறைந்த விலையில் முட்டை,பாதாம்,மட்டன் ,சிக்கன்  போன்றவை  எங்கு கிடைக்கும் என விசாரித்து அந்த வியாபாரிகளின்  தகவலை நோயாளியிடம் பகிர்ந்து கொள்ளவும், அதற்கு பதிலாக உங்கள் சிற்றுண்டி , பயண போக்குவரத்துக்கு போன்றவைக்காக அந்த வியாபாரிடம் சிறிதளவு பணத்தை சேவையாக பெற்றுக்கொள்ளவும்(சிற்றுண்டி , பயண போக்குவரத்துக்கு போன்றவைக்காக மட்டும்). அவளவு தான் இப்பொது நீங்கள் ஒரு சமூக சேவகர் மற்றும் ஒரு மருத்துவர்.

இந்த காலத்தில் படித்து மருத்துவர் ஆவது மிகவும் கடினம். இப்படி எளிதான வழியில் மருத்துவர் ஆவது என்பது அனைவர்க்கும் அமையாது. எனவே அனைவரும் நோயற்ற சமுதாயத்தை உண்டாக்க இப்போதே மருத்துவர்களாக அவதாரம் எடுப்போம் ,இதை படிக்கும் நீங்களும் 100 ரூபாய் வாங்கி கொண்டு , யாருக்கேனும் பேலியோ டயட் சொல்லுங்கள்.இது எல்லாம்  ஒரு சேவை தானே. முடிந்த வரை நோயற்ற சமூகத்தை உண்டாக்க போராடுவோம், இதையே நம் லட்சியம் என கொண்டு வாழ்வோம்.

அதிக புரதமும், அடர்த்தி குறையும் எலும்புகளும்(Osteoporosis).

   பொதுவாக  புரதங்கள் (protein) அமில தன்மை வாய்ந்தவை(acidic), நமது உடல் இயற்கையாக காரதன்மை கொண்டது(alkaline). நமது உடலின் அமில மற்றும் கார தன்மை என்றும் சமநிலையில்  இருக்க வேண்டும். அமில கார சம நிலை pH என்ற குறியீடு மூலமாக அளவிட படுகிறது  (1-14).  pH அளவீடு 7 என்பது சரியான அளவில் அமில கார அளவு உள்ளது என காட்டுகிறது. இதன் அளவீடு 7க்கு குறையும்போது  உடல் அதில் அமில தன்மை கொண்டிருக்கும் , அதேபோல் 7க்கு அதிகமாக இருக்கும்போது  உடலில்  கார தன்மை மிகுந்து இருக்கும்.
நாம் தினசரி நமது உணவில் அதிக அமில தன்மை கொண்ட உணவு பொருளைகளை சேர்க்கும் போது  உடலில் அமில தன்மை அதிகரிக்கிறது , உடல் அதை சமநிலை படுத்தி pH அளவீடை குறைக்க உடல் ஒரு வித திரவத்தை சுரந்து அமிலத்தை சம நிலை படுத்தும், இந்த அமில சமநிலை படுத்தும் திரவம் பெரும்பான்மையாக கால்சியம் மூல  பொருள்களையே அதிகமாக கொண்டிருக்கும் .இந்த கால்சியம் உடலுக்கு  எங்கிருந்து கிடைக்கிறது என்றால், நமது உடலில் உள்ள எலும்புகளில் இருந்தே இது பெறபடுகிறது.

அதாவது நாம் அமில தன்மை அதிகமாக  கொண்ட பேலியோ டயட்டில் பரிந்துரைக்கப்படும் விலங்கு புரதங்களை தினசரி உணவாக உட்கொள்ளும்போது, அது மிக அதிமான அமிலத்தை கொண்டிருக்கும் , அதனை சமநிலை படுத்த உடல் தொடர்ச்சியாக நமது எலும்புகளில் இருந்து கால்சியம் உறிஞ்சி  எடுக்கிறது.இதனால் நமது எலும்புகள் அடர்த்தி குறைந்து எளிதில் உடைத்து விடும் நிலைக்கு ஆளாகிறது அதவாது Osteoporosis நோய் . அதிக புரதங்களை எடுக்கும்போது கால்சியம் மாத்திரைகளை எடுத்து கொள்வது  என்பது மிக அவசியம் அப்போது தான் எலும்புகளில் இருந்து கால்சியம் பெறப்படுவது தடுக்கப்படும். ஆனால் தொடர்ச்சியாக கால்சியம் மாத்திரை எடுப்பதும் உடலுக்கு மிக நல்லதல்ல,  நமது உடலுக்கு தினசரி தேவையான 50 கிராம்  புரதம்  என்பது மிகவும் போதுமானது , இது அளவுக்கு மிகும்போது கிட்னி, எலும்பு பலமிழத்தல் போன்ற கண்ணுக்கு  தெரியாத பல உடல் உபாதைகள் நீண்ட நாளடைவில்ஏ ற்படும்.எனவே பேலியோ டயட் போன்ற  குறுகிய காலத்திற்கு சிற்றின்பத்தை தரும் உணவு முறைகளை பின்பற்றாமல், அனைத்து சத்துக்களும் சம நிலையில் இருக்குமாறு , உங்கள் உணவு முறைகளை அமைத்து கொள்ளுங்கள். அதிக புரதங்களை எடுத்து கொண்ட , விளையாட்டு வீரர்கள், பளு தூக்கும் வீரர்கள் போன்றவறின்  கடைசி காலங்கள் மற்றும் இறப்பு விகிதங்கள் பெரும்பாலும் சிறுநீரக செயலிழப்பே என பல்வேறு ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன .


கீழே கொடுக்க பட்டுள்ளது கிளாசிபைடு டீஸ்யு இன்டர்நேஷனல் (Calcified Tissue International)  லில் பதிவிட பட்ட எலும்பு முறிவுக்கு அதிக விலங்கு புரதங்களுக்கும் உள்ள மிக நெருக்கமான தொடர்பை விளக்கும் வரைபடம். அதுவும் குறிப்பாக பெண்களுக்கு இடுப்பெலும்பு இந்த விலங்கு புரதங்களால் மிகவும் பலவீனபடும் என பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன

 
   https://www.ncbi.nlm.nih.gov/pubmed/1739864



Saturday, October 29, 2016

A2 பால் லிட்டர் 120 மட்டுமே

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் வரை மிகவும் சாதாரணமாக ஒரு ஏழை குழந்தைக்கு கூட மிக எளிதாய் கிடைத்த A2 நாட்டு மாட்டு பசுக்களின் பால்,இன்று லிட்டர் 80 ரூபாய் மட்டும் , 100 ரூபாய் என உயர்ந்து பொருளாதரத்தில் சற்று உயர்ந்த மக்களுக்கு மட்டுமே கிடைக்கும் சூழ்நிலையில் இன்று  உள்ளது. அபபடியே இவர்கள் இவ்வளவு விலை கொடுத்து வாங்கினாலும் அது உண்மையில் A2 பால் தானா என்பது மிக பெரிய கேள்வி குறி ?

ஏன் A2 ?

ஜெர்சி மற்றும் நாட்டு மாட்டு பாலில் உள்ள அனைத்து சத்துக்களும் ஒன்றே, ஒன்றே ஒன்றை தவிர அது பீட்டா கேசின் (beta casein) எனும் மூலக்கூறு நாட்டுமாட்டின் பாலில் உள்ள  அமினோ அமிலத்தின் (amino acid ) 67வது இடத்தில ப்ரொளின் (proline)  ஆக இருக்கும்  அதே ஜெர்ஸி பசுவில் அமினோ அமிலத்தின் (amino acid ) 67வது இடத்தில ஹிஸ்டிடின்(histidine) ஆக  இருக்கும். இந்த  ஹிஸ்டிடின் தான் type 1 நீரிழிவு நோய்க்கு முக்கிய காரண பொருளாக இருக்கலாம் என்றும் , இது ரத்த குழாய்களில் காயங்களை ஏற்படுத்தி மாரடைப்பை ஏற்படுத்த வாய்ப்புகள் அதிகம் என்பது  சமீபத்திய ஆய்வுகளின் தகவல்கள் .இதுதான் மக்களை  A2 பாலை நோக்கி மக்களை படை எடுக்க வாய்த்த காரணம்.

ஆனால் சந்தையில் கிடைக்கும்  A2  பால் உண்மையான நாட்டு பசுக்களின் பாலா?

நாட்டுப்பசு ஒரு நாள் ஒன்றுக்கு  மிக அதிக பட்சமாக 8 லிட்டர் கொடுக்கும்.அதுவும் கன்று ஈன்ற  மூன்று மாதங்கள் மட்டுமே ,அதன் பிறகு ஒரு லிட்டர் 2 லிட்டர் என்றே பால் கொடுக்கும். ஒரு நாளைக்கு  ஒரு வியாபாரி 100 லிட்டர்  A2 பால் விற்க வேண்டும் என்றால் அவரிடத்தில் 20 பசுமாடுகள் இருந்தால் மட்டுமே முடியும், ஏனென்றால் 20தில் 5 மாடுகள் சினையாய் இருக்கும் , 5 மாடுகள் 2 லிட்டர் மட்டுமே கறக்கும் ,மீதி 10 மாடுகள் மட்டுமே 8 லிட்டர் அளவில் கறக்கும்.உண்மையில் 25 மாடுகளுக்கு தினசரி உணவளித்து 100 லிட்டர் பால் விற்றால், லிட்டர் 250 ரூபாய்க்கு விற்றாலும்  அவர்களுக்கு லாபம் ஒன்றும் கிடைக்காது.   பிறகு எப்படி 100 ரூபாய், 80 ரூபாய்க்கு இந்த  A2 பால் கிடைக்கிறதென்றால் , இதுவும் கலப்படமே  50 லிட்டர்  A1 பாலுக்கு ஒரு லிட்டர்  A2 பால் என கலந்து  A1 பாலையே  A2 என்று விற்கிறார்கள்.  A2 பாலை அதிக உற்பத்தி செய்வது( mass production ) என்பது நடக்க காரியம். விவசாயிகளும் நாட்டு மாட்டு பசு வளர்ப்பில் லாபம் ஒன்றும் பார்க்க முடியாது என்பதால் அவர்கள்  ஜெர்ஸி பசுக்களையே  99% வளர்க்கிறார்கள். ஒரு சிலர் தங்கள் வீட்டு தேவைக்கு மட்டும் ஒரு நாட்டுப்பசு வளர்க்கிறார்கள். உண்மையில் உங்கள்  வீட்டில் நாட்டு பசு மாடு வாங்கி வளர்த்து ,அதில் பெற்றால் மட்டுமே  உண்மையான  A2 பால் கிடைக்கும்.அல்லது உங்களுக்கு வீட்டுக்கு அருகில் யாராவது நாட்டு மாடு வைத்து பால் கறந்து விற்றால் அதை வாங்கலாம். இந்த டப்பாக்களில் அடைத்து விற்கும்  A2 பாலை 100 ரூபாய் கொடுத்து வாங்குவதற்கு , நீங்கள் A1 பாக்கெட் பாலே வாங்கி குடிக்கலாம்.  A2  பால் விளம்பரங்களை நம்பி ஏமாறாதீர்கள். உண்மை உணர்வோம்
    

Friday, October 28, 2016

எது நல்ல செக்கு எண்ணெய் ?


"தூய மர செக்கு எண்ணெய் இங்கு கிடைக்கும்", "வாகை மர செக்கு எண்ணெய் இங்கு கிடைக்கும்" என தினசரி நாளிதழ்கள்,முகநூல்,ரேடியோ FM  என எங்கு  பார்த்தாலும் இதே விளம்பரங்கள். உண்மையில் இந்த விளம்பரங்கள் செய்யும் நபர்கள் விற்பனை செய்யும் பொருள்கள் உண்மையில் தரமானதா என ஆராய்ந்து பார்த்தால், இவர்கள் விளம்பரபடுத்தும் தரத்திற்கும் ,உண்மை நிலைக்கும் நிறைய வேறுபாடு. முதலாவதாக இவைகள் மர  செக்கு எண்ணெய்யே   இல்லை. மர செக்கில்  ஒரு நாள் ஒன்றுக்கு 50 லிட்டர் எண்ணெய் மட்டுமே எடுக்க முடியும்.அதுவும் ஒரு செக்கை வைத்து கொண்டு கடலை எண்ணெய் தேங்காய் எண்ணெய் ,நல்லெண்ணெய் போன்றவற்றை உற்பத்தி செய்பவர்கள் ,தினசரி ஒரு எண்ணெய்  20 லிட்டர்க்கு மேல் எடுக்க முடியாது. நீங்கள் மர செக்கு வைத்திருப்பவரிடம் ,நேரிலேயே சென்று வாங்கினாலும் , ஒரு பெரிய பாத்திரத்தில் ஊற்றி வைத்திருக்கும் எண்ணையிலிருந்தே நமக்கு அதை ஊற்றி தருவார்,அது எண்ணெய் மில்லிலிருந்து வாங்கி அவர்கள் வைத்திருக்கும் எண்ணெய் , அதாவது நம் கடையில் எண்ணையை போன்றதே.10 லிட்டர் எண்ணெய்க்கு  ஒரு லிட்டர் செக்கு எண்ணெய் கலந்து விற்பார்கள். இது தான் உண்மை நிலை.

மரச்செக்கு வைத்திருக்கும் நண்பரிடம் இது பற்றி கேட்டபோது  அவர் சொன்னது மரசெக்கு எண்ணெய் ஆட்டும்போது ஒருவர் செக்கின் பக்கத்திலேயே இருந்து எண்ணெய் புண்ணாக்குகளை  தள்ளி  விட்டு கொண்டே இருக்க வேண்டும்.ஒரு நாள் கூலி அவருக்கு 300 முதன் 400. ஒரு நாள் சராசரியா 50 லிட்டர் எண்ணையில் அதிகபட்சம் லிட்டருக்கு  30 ரூபாய் வைத்தால் கூட வரும் 1500 ரூபாயில் , ஆள் கூலி  400 மற்றும் ,மின்சார செலவு , செக்கின் மரம் மாற்றுதல் போன்றவற்றை பார்க்கும்போது கடைசியில் 700 முதல் 800 ரூபாய் மட்டுமே கையில் நிற்கும். இதில் எப்படி விளம்பரம் செய்ய முடியும், இதில் எப்படி குடும்பம் நடத்த முடியும். எண்ணெய் மில்லிலிருந்து எண்ணெய்  வாங்கி அதனை செக்கு எண்ணையுடன் கலந்து விற்றால்  மட்டுமே எங்களுக்கு  கட்டுப்படி ஆகும்.இல்லா  விட்டால்  350 ரூபாய்க்கு கடலை எண்ணை விற்க வேண்டும்   அப்போது தான் கலப்படமின்றி எண்ணெய்  விற்றால் எங்களுக்கு லாபம் கிடைக்கும் என்று கூறுகிறார்.

சரி உண்மையான செக்கு எண்ணெய் பெற  என்ன செய்ய வேண்டும்?

உங்களுக்கு தூய கடலை  எண்ணெய்  வேண்டுமா, நீங்கள் ஒரு 10 or 20 நண்பர்கள்  ஒன்றாக சேர்ந்து உடைத்த கடலை பருப்புகளை / தேங்காய் பருப்புகளோ தெரிந்தவர் மூலமாக சந்தையில் வாங்கி  அதை நீங்களே ஒரு மர செக்கு வைத்திருப்பவரிடம் சென்று உங்கள் பருப்புகளை கொடுத்து , அதில்
எண்ணெய் ஆட்டி வைத்து கொள்ளுங்கள். ஒரு 10 or 20பேர் சேர்ந்து செய்வதால் , வேலை ஒன்றும் பெரிய சிரமாக இருக்காது. ஒவ்வொரு முறை ஒவ்வொருவர் செய்யலாம்.அல்லது உங்களுக்கு யாராவது  கிராமபுற  நண்பர்கள்/உறவினர்கள்  இருந்தால் அவர்கள் மூலமாக இதை செய்யுங்கள்.அவர்களை சிறிதளவு லாபம் எடுத்து கொள்ள சொல்லிவிட்டு , நீங்கள் தரமான எண்ணெய்யை பெறலாம்.

மேலும் சல்பர் இல்லாத தேங்காய் எண்ணெய்  உங்களுக்கு அழகாக பேக் (pack ) செய்து  லேபிள் ஒட்டி  யாரும் விற்பனை செய்ய மாட்டார்கள். அதிக உற்பத்தி (mass production ) என்று வந்து பிராண்ட்(brand)   என்று வந்து விட்டாலே அங்கு தரம் கட்டாயம் (compromise)
குறைக்க பட்டிருக்கும்.  விற்பனை இல்லாவிட்டால் பல மாதங்கள் ஸ்டாக்கில்  இவை இருக்க வேண்டும் எனவே கட்டாயம் அது கெட்டு போகாமல் இருக்க பல வேதி பொருள்கள்  எண்ணையில் சேர்க்கப்பட்டிருக்கும்.

உண்மை உணர்வோம்
நல்ல தரம் வேண்டுமா? சிறிது முயற்சி எடுத்து தான் பெற வேண்டும்.  

சீக்கிரம் சாகவேண்டுமானால் தயவுசெய்து பேலியோ பின்பற்றுங்கள். சொல்வது The U.S. News and World Report

http://www.drorestesg.com/blog/paleo-diet-ranked-dead-last-avoid-being-dead-fast-

கோழிக்கு ஆன்ட்டி பயாடிக் போட்டால் உனக்கு என்ன?

கோழிக்கு ஆன்ட்டி பயாடிக் போட்டால் உனக்கு என்ன? அது கோழிக்கு தானே ஆபத்து, அதை சாப்பிடும் நமக்கு என்ன? என்பது ஒரு நண்பரது வாதம்.சரி ஒரு உங்களிடம் ஒரு கேள்வி? நீங்கள் இரண்டு மாடு வைத்திருக்கிறீர்கள்.ஒன்றை தினமும் புல்,தழை,இலை என உணவிடுங்கள், மற்றொன்றை ஒரு நகரத்திற்குள் துரத்திவிட்டு தினசரி உணவாக சுற்றில் ஒட்டி இருக்கும் போஸ்டரையும் ,பிளாஸ்டிக் காகிதங்களையும் உணவாக உண்ண  வைக்கிறீர்கள். இரண்டு மாடுகளும் தினசரி தலா 2 லிட்டர் பால் கொடுக்கிறது.இந்த இரண்டு மாடுகள் கொடுக்கும் பாலில் எதை நீங்கள் அருந்துவீர்கள்.இரண்டு வகை பாலுக்கும், அதில் இருக்கும் சத்துக்களுக்கும் வித்தியாசம் இருக்கிறதா இல்லையா ?

அதே போல் இரண்டு ஆடு வைத்திருக்கிறீர்கள்.ஒன்றை தினமும் புல்,தழை,இலை என உணவிடுங்கள், மற்றொன்றை ஒரு நகரத்திற்குள் துரத்திவிட்டு தினசரி உணவாக சுற்றில் ஒட்டி இருக்கும் போஸ்டரையும் ,பிளாஸ்டிக் காகிதங்களையும் உணவாக உண்ண வைக்கிறீர்கள். இந்த இரண்டு ஆடுகளின் இறைச்சியும் ஒரே தரம் உள்ளதா. புல் தின்னும் ஆட்டின் கறியை தொடர்ச்சியாக உண்பவருக்கும், போஸ்டரை உண்ணும் ஆட்டின் கறியை தொடர்ச்சியாக உண்பவருக்கும் ஒரே மாதிரியான சத்துக்கள் கிடைக்குமா? அதேபோல் ஆட்டிற்கு தொடச்சியாக அரைக்கப்பட்ட தானிய உணவுகளை கொடுத்தாலும் ,இறைச்சியின் தன்மை மாறுபடுமா இல்லையா?

நமது உடலில் உள்ள உறுப்புகள் மற்றும் தசை ,எலும்புகள்  போன்றவற்றின் வலு,தன்மை போன்றவை நாம் உண்ணும் உணவுகளின் தன்மையையும், உணவுகள் கொண்டுள்ள சத்துகளின் தன்மையையும் ஒத்தே இருக்கும். இது அனைத்து வகை உயிரினங்களுக்கும் பொருந்தும், ஏன் தாவர  வகைகளுக்கும் கூட இது பொருந்தும்.உதாரணமாக கடல் ஓரங்களில் வளர்ந்த தென்னையில் காய்க்கும் இளநீரில் உப்புதன்மை ,மற்ற பகுதிகளில்  விளையும் இளநீரை விட சற்று அதிகமாக  இருக்கும்,அந்த தேங்காயின் சுவையும் சற்று உப்பு சுவையுடனே இருக்கும். காரணம் தென்னைக்கு உப்பு அதிகமாக உள்ள கடல் நீர் பாய்வது தான் .இதே போல்தான் நிலக்கடலை அறுவடை செய்யும் காலங்களில் , அந்த பகுதிகளில் கிடைக்கும் எலி முயல் போன்றவற்றின் இறைச்சி மிகவும் சுவையாக இருக்கும் என சொல்லுவார்கள்,ஏனென்றால் இவை அதிக நிலக்கடலை உண்ணுவதா. அதேபோல் அதிக மக்காசோளம்  கொடுத்து வளர்க்கப்படும் மாட்டின் கொழுப்பு வெண்மை நிறத்திலும், புல் மேயும் மாட்டின் கொழுப்பு மஞ்சள் நிறத்திலும் இருக்கும். இறைச்சியின் சத்துக்களும் அதே போல் வேறுபடும்.உண்ணும் உணவின் தன்மை நமது உடலின் ஒவ்வொரு திசுக்களிலும் பிரதிபலிக்கும். இவ்வாறே நாம் ஆன்ட்டி பயாடிக் மருந்து அதிகம் கொடுக்கப்பட்ட கோழிகளை உண்ணும்போது, அது கோழியின் கல்லிரல் ,கிட்னி போன்ற பகுதிகள் மட்டுமின்றி அதன் உடலின் ஒவ்வொரு பகுதியும் ஆன்ட்டி பயாடிக்களை மிக சிறிதளவேனும்  கொண்டிருக்கும்.ஒரு கிலோ பண்ணைக்கோழி  இறைச்சியில் 3 முதல்150  மைக்ரோகிராம் ஆன்ட்டி பயாடிக் மருந்துகளின் படிவுகள் இருப்பதாக  சமீபத்திய ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன.எனவே பண்ணைக்கோழிகளை தொடர்ச்சியாக உண்ணும்போது ஆன்ட்டி பயாடிக் மருந்துகளின் தாக்கம் கட்டாயமாக இருக்கும். எனவே அதிகம் இந்த பண்ணைகோழி இறைச்சி தொடர்ச்சியாக உண்ணுவதை தவிர்ப்போம் .

பேலியோ டயட் புத்தகம் திறனாய்வு அத்தியாயம் 2


மனித இனத்தின் பரிணாம அடிப்படையையும் அவர்கள் உணவுமுறையும் விவரிப்பதில் தொடங்குகிறது இந்த அத்தியாயம்.32 லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்ததாக கருதப்படும் லூஸி எலும்புக்கூடும் அதற்கு  அருகில் கிடைத்த விலங்குகளின் எலும்புகளும்  மற்றும் 26 லட்சம் ஆண்டுகளுக்கு முன் கிடைத்த ஹோமோ மனிதர்களின் தடயங்களும் அன்றைய மனித உணவில் இறைச்சி இருந்ததை உறுதி செய்ததாக ஆசிரியர் விளக்குகிறார். மேலும் எப்படி சமைத்த  இறைச்சி மனிதனின் பரிணாம வளர்ச்சியில் எப்படி முக்கிய பங்காற்றியது என்பதையும் சிறப்பாக விளக்கி , பரிணாம வளர்ச்சியில் நமது மூளை வளர்ச்சியை பல மடங்கு அதிகமாக்கி நம்மை விலங்குகளிடமிருந்து மனிதனாக மாற்ற உதவிய இறைச்சி உணவு எப்படி நமக்கு தீங்கு செய்ய முடியும் என்று கேட்கிறார் .

இந்த அத்தியாயத்தில் ஆசிரியர் குறிப்பிட்டதுபோல், சமைத்த இறைச்சி உணவு மனித மூளையின் அபரிதமான வளர்ச்சிக்கு காரணம் அல்ல.இது முற்றிலும் தவறான கருத்தாகும். சமைத்த இறைச்சியானது உடலுக்கு தேவையான ப்ரோடீன்,கொழுப்பு,எனர்ஜி போன்றவற்றை மட்டுமே தர  முடியுமே தவிர மூளை வளர்ச்சிக்கு சமைத்த இறைச்சி எந்த விதத்திலும் காரணமாக இருக்கவே  முடியாது என்றே ஆய்வுகள் தெரிவிக்கின்றன.அதிகமான குளுகோஸ் தேவை உள்ள உறுப்பான  மூளை எப்படி இந்த குறைந்த கார்ப் உணவுகளின் மூலம் மிக பெரிய வளர்ச்சியை அடைய முடியும் என்பதுதான் இங்கு கேள்வி. என்னதான் உடல் கொழுப்பை எரிக்கும் கீட்டோன்ஸ் (ketones mode) முறையில் இயங்கினாலும் குறைந்தபட்சம் 30 கிராம் குளூகோஸ் அளவு கட்டாயம் மூளைக்கு தேவை.

மனிதனின் இந்த மிக பெரிய மூளை வளர காரணம் ஸ்டார்ச் என்பதும் மாவு சத்து பொருள்களே என்பது நவீன ஆராச்சியாளர்கள் பெரும்பாலானவர்களின் கருத்தாக இருக்கிறது. இதற்கு முக்கிய ஆதாரமாக இருப்பது அமிலஸ் (amylase) எனப்படும் நமது உமிழ்நீரில் காணப்படும் ஒரு என்சைம் (enzyme),இந்த அமிலஸ் நாம்  உண்ணும் மாவு சத்துள்ள உணவுகளை செரிமானத்தை எளிதாக்கும் பொருட்டு சிறிய சிறிய துகள்களாக உடைக்கும் வேலையை செய்வது, இது சமைத்த மாவுச்சத்துள்ள உணவுகளுக்கு மட்டுமே மிக சிறப்பாக வேலை செய்யும்.அமிலஸ் ஜீன் (amylase gene) நமது மூதாதையர்களாக கருதப்படும்
சிம்பான்சியின்(Chimpanzees) DNA வில் இரண்டு மட்டுமே காணப்படுகிறது. ஆனால் மனிதர்களுக்கு அதிகபட்சமாக இது 18 வரை நமது DNA வில்  உள்ளது...இதன் பொருள், ஸ்டார்ச் எனப்படும் மாவுசத்து உள்ள உணவு பொருளை  மனிதன் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உண்ண தொடங்கி விட்டான்,அதன் தொடர்ச்சியாகவே பரிணாம வளர்ச்சியில் நமக்கு அமிலஸ் (amylase) மூலக்கூறுகள் மாவுசத்து உணவுகளை செரிக்கும் பொருட்டு  நமது DNA வில் அதிகரித்துள்ளன.மேலும் பேலியோதிக் காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் அனைவருக்குமே அமிலஸ் என்சைம் DNA மூலக்கூறுகள் எண்ணிக்கை 10க்கும் மேல்(ஏனென்றால் நூலாசிரியர் சொல்வது போல் கடந்த 10000 வருடங்களில் மரபணு மாற்றம் 0.01% அளவே,எனவே  தற்போதைய மனிதனின்  DNA க்கும் , பேலியோ மனிதனின் DNA க்கும் பெரிய மாற்றமில்லை).இதனால் பேலியோ காலத்திற்கு வெகு காலம் முன்பே மனிதன் ஸ்டார்ச் நிரம்பிய கிழங்கு வகைகள்,தானியங்கள் போன்றவற்றை உண்ண  துவங்கிவிட்டான், இதனாலேயே அமிலஸ் என்சைம் DNA மூலக்கூறுகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனவே இப்போது பேலியோ டயட் என அனைவருக்கும் பரிந்துரைக்கப்படுவது நிச்சயமாக கற்கால மனிதனின் உணவு முறை இல்லை.

இதை பற்றி ஆஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள ஆராய்ச்சி கட்டுரை மற்றும் நியூயார்க் டைம்ஸ் நாளிதழின் கட்டுரையின் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.நேரமிருந்தால் இதை படித்து மேல்சொன்ன  கருத்துக்களை உறுதிபடுத்தி கொள்ளுங்கள்.

http://sydney.edu.au/news-opinion/news/2015/08/10/starchy-carbs--not-a-paleo-diet--advanced-the-human-race.html
http://www.nytimes.com/2015/08/13/science/for-evolving-brains-a-paleo-diet-full-of-carbs.html?_r=0
http://www.telegraph.co.uk/foodanddrink/foodanddrinknews/11798169/Did-cavemen-eat-carbs-Why-the-paleo-diet-could-be-wrong.html

இதிலிருந்து தெரியவருவது பேலியோ மனிதரும் அதற்கு முந்தையவருக்கும் மாவு சத்துள்ள உணவுகள் புதிதல்ல.

1800 களில் பிரபலமாயிருந்த பாண்டிங் டயட் எனும் உடல் எடை குறைக்கும்  டயட் பற்றி நன்றாக விளக்குகிறார், குறைந்த கார்ப் ,அதிக கொழுப்பு உணவு என்பது எடை குறைப்பில் பல ஆண்டுகாலமாக எடை குறைப்பு மருத்துவத்தில் இருந்து வருவது தான்.ஹாலிவுட் திரைப்பட நடிகர்கள் உடல் எடை கூட்ட /குறைக்க இந்த உணவு முறையையே பல ஆண்டுகளாக பின்பற்றி வருகிறார்கள்,இப்போது பாலிவுட் இல்  கூட இதையே பின்பற்றுகிறார்கள்.1800 களில் கிடைத்த அசைவ உணவுகளின் தரத்திற்கும் ,இப்போதுள்ள தரத்திற்கும் வித்தியாசம் மிக அதிகம்.இந்த டயட் முறை அக்கால மக்களுக்கு நன்மை செய்திருப்பதாகவே ஏற்றுக்கொண்டாலும் , தற்போதுள்ள நடைமுறைக்கு சிறிது கூட ஒத்துவராது என்பதே உண்மை. மிகவும் வசதி உள்ளவர்கள் வேண்டுமானால் ,இந்த டயட் முறையை தரமான அசைவ உணவுகளுடன் பின்பற்ற இயலும்.சாதாரண மக்களுக்கு கொஞ்சமும் பயன் தராது.


ஆன்சல் கீஸ் பற்றி நூலாசிரியர் மிக விளக்கமாக எழுதியுள்ளார். ஆன்சலின் "ஏழு நாடுகளின் ஆராய்ச்சி" ஆய்வு உலக உணவு முறையில் மிக பெரிய மாற்றத்தை ஏட்படுத்தியது உண்மை. ஆனால் இந்தியாவில் இந்த ஆய்வின் தாக்கம் ஒன்றுமே இல்லை,ஏனென்றால் பொதுவாகவே நமது உணவில் மிக அதிக கொழுப்பு உணவுகள் இல்லை.தினம் ஒரு முட்டை,இறைச்சி போன்ற உணவு பழக்கமே நமக்கு கிடையாது. வாரம் ஒரு முறை  அசைவம் என்பதே,பல ஆண்டு காலமாக நமது வழக்கில் உள்ளது.ஒரே மாற்றம் கடலை ,தேங்காய் எண்ணெய்களின் இடத்தை சன் பிலோவேர் எண்ணெய்  பிடித்தது தான். உலகமயமாக்கலுக்கு பிறகே அமெரிக்க உணவு முறைகளான கார்ன் பிலேக்ஸ் , பர்கர் ,பிஸ்சா  போன்றவை உள்நுழைந்தன..20 ஆண்டுகளுக்கு முன் வரை, நமது பாரம்பரிய உணவு முறைகளில் மிகப்பெரிய மாற்றமென்று ஒன்று கிடையாது.பர்கர் ,பிஸ்சா  போன்றவை சில மேல்தட்டு மக்களுக்கு வேண்டுமானால் பல ஆண்டுகளுக்கு முன்பே பரிச்சியமாக இருக்கலாம்,ஆனால்  இவை பெரும்பான்மையான இந்திய மக்களுக்கு கடந்த 10  வருடங்களாகவே தெரியும்.

எனவே ஆசிரியர் கூறுவது போல் இந்த ஏழு நாடுகளின்ஆ ராய்ச்சியின் விளைவாக, உணவு முறைகள் மாறி,நமக்கு நீரிழிவு,பிரஷர்,கான்செர் போன்ற நோய்கள் வந்திருப்பதாக குறை கூறுவது சற்றும் ஏற்றுக்கொள்ள தக்கதல்ல.

Thursday, October 27, 2016

பேலியோ டயட் புத்தகம் திறனாய்வு . அத்தியாயம் 1


                       முதல் அத்தியாயம் இந்த சமுதாயத்தில் சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்தம்,புற்றுநோய் மாரடைப்பு,உடல்பருமன் போன்ற நோய்ககள் ஏற்படுத்தி இருக்கும் தாக்கத்தை பற்றியும், அதற்கான முழுமையான தீர்வு  தரும் முயற்சியை மருத்துவ உலகம் கைவிட்டுவிட்டதாகவும் ,இப்போதுள்ள மருத்துவர்களுக்கு, ஏன்  இந்த நோய்கள் வருகின்றன என தெரியவில்லை  எனவும்,இந்த நோய்களை குணப்படுத்தும் வழிமுறைகள் பற்றியும் போதிய அறிவு கிடையாது எனவும் தற்கால மருத்துவ உலகத்தின் மீதும் ,மருத்துவர்கள் மீதும் நூலாசிரியர் கடுமையாக சாடுகிறார்.உலகின் பல மூலைகளிலும் உள்ள மருத்துவ  ஆரய்ச்சியாளர்கள் தங்கள் வாழ்நாளை முழுவதுமே மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு அர்ப்பணித்து புதிய மருந்துகளையும், பல ஆராய்சி கட்டுரைகளையும் சமர்ப்பித்து வருகிறார்கள்.நூலாசிரியர் சாதாரணமான  (இந்த புத்தகமே பல மருத்துவ ஆராய்ச்சி கட்டுரைகளின் மொழிபெயர்ப்பு என்பதை மறந்துவிட்டு)சில வார்த்தைகளில் ஒட்டு மொத்த மருத்துவ உலகத்தையும், அனைத்து மருத்துவர்களின் உழைப்பையும்,சேவையையும் மிகவும் அலட்சியப்படுத்தி தனது அத்தியாயத்தை தொடங்குகிறார்.

மேலும் நமது பாரம்பரிய உணவுகளான சிறுதானியங்கள் கம்பு,கேழ்விரகு ,ராகி,தினை போன்றவைகள் இந்த நோய்களின் தாக்கத்தை ஓரளவுதான்  குறைப்பதாக  குறை கூறி , இவை நோய்களுக்கு முழு தீர்வு தர இயலாது எனவும் அவசர அவசரமாக முடிவுகட்டி,இந்த உணவுகளை உண்டு மிகவும் ஆரோக்கியமாக 100 வயது வாழ்ந்த நாம் தாத்தா & பாட்டிகளை மறந்து விட்டு நம்மை நியூஸிலாந்து டோக்லு தீவுக்கு 1800 ஆம் வருடங்களுக்கு, பன்றி,மீன்,கோழி மாமிசங்களை உண்ணும் பழங்குடி மக்களிடம் நம்மை அழைத்து செல்கிறார்.அங்கு அவர்கள் உண்ணும் உணவு முறையும் ,அவர்களுடைய தோற்றத்தை பற்றியும் சிலாகித்து கூறும் ஆசிரியர் அவர்களுக்கு புற்றுநோய்,சர்க்கரை,ரத்தஅழுத்தம் போன்றவை இல்லாததை கண்டு மிகவும் வியக்கிறார்.நம் அனைவருக்கும் தெரியும் இரண்டு தலைமுறைக்கு முன் இந்த நோய்கள் எவருக்கும் தமிழகத்தில் கிடையாதென்று. 50 வருடங்களுக்கு முன் நாம் ஆரோக்கியமாக வாழ்ந்தோம்,இப்பொது அதில் என்ன தவறு என்று பார்த்தாலே, நம் பிழையை சரிசெய்து ஆரோக்கியமாக வாழலாம்.ஆனால் இவர் பேலியோ உணவு முறை எனும் எடை குறைப்பு உணவுமுறையை இந்த நோய்களுக்கு தீர்வாக மாற்ற முயல்வதும் ,அதற்கான சப்பைக்கட்டு ஆதாரங்களை உருவாக்கவே நம்மை  டோக்லு தீவுக்கு அழைத்து செல்கிறாரோ எண்ணற்ற சந்தேகம் வலுக்கிறது. பச்சை இறைச்சியில் வைட்டமின் A இருப்பதாய் ஒரு பழங்குடி கிழவர் சொன்னதும்  அவர் அறிவை புகழும் இவர், நமது சித்தர் பாடல்களில் அனைத்து விதமான நோய்களுக்கும்,வைட்டமின் குறைபாடுகளுக்கும் எண்ணற்ற மருத்துவ தகவல்கள் உண்டு என்பதையும் வேண்டுமென்றே மறைத்து,முற்றிலும் தமிழர் உணவு மற்றும் மருத்துவ முறைகளை இருட்டடிப்பு செய்திருக்கிறார்.

இந்த அத்தியாயத்தின் கடைசியில்  5 இட்லி சாம்பார் சட்னியுடன் சாப்பிட்டால் அது 20 ஸ்புன் சர்க்கரை சாப்பிடுவதற்கு சமம் என தன் அரிய  கண்டுபிடிப்பை முன் வைக்கிறார்.

சாம்பார் எதனால் செய்யப்படுகிறது?
தக்காளி,வெங்காயம்,மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,உப்பு,கறிவேப்பிலை,துவரம்பருப்பு,கடலை பருப்பு,சீரகம்,பூண்டு,ஏதாவது இரு வகை காய்கறிகள்,கடுகு,இஞ்சி எண்ணெய் போன்றவற்றின் கலவை.
இட்லியின் மூலப்பொருள் என்ன?
உளுந்தம்பருப்பு ,அரிசி

இட்லி சாம்பார் என்பது சரியான விகிதத்தில் அனைத்து சத்துக்களும், மஞ்சள் தூள்,கடுகு,மிளகாய் தூள் போன்றவற்றில் கான்செர் தடுப்பு மூல பொருளகளும் நிறைந்துள்ளது.சாம்பார் ,ரசம் போன்றவை நமது முன்னோர்கள் கண்டுபிடித்த மூலிகை ரசங்களே,அதையே தினமும் நாம் உண்டு வந்து இருக்கிறோம். ஆனால் இதை எடுக்கும் அளவு, உடல் உழைப்பு குறைவு , கற்று நீர் மாசு, போன்றவைவே நம்மை இந்த ரத்த அழுத்தம்,புற்றுநோய் மாரடைப்பு,உடல்பருமன் போன்ற நோய்களுக்கு உட்படுத்துகிறது.. இட்லி சாம்பார் என்பது  உலகின் சிறந்த காலை உணவுகளில் ஒன்று என (WHO) world health  organization  பரிந்துரைத்துள்ளது. (http://v6news.tv/world-health-organisation-reported-idli-is-the-best-recipe-v6-spot-light)..சாம்பார்,ரசம் போன்றவை , நம் முன்னோரின் பல ஆண்டுகால ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட உணவு பொருள்களே,இந்த உணவு பொருட்களை , 50 ஸ்புன் சர்க்கரையுடன் ஒப்பிடுவது எவ்வளவு வக்கிரமானது.மொத்தத்தில் கம்பு கேழ்விரகு ,ராகி , அரிசி உணவுகளை அரை கிலோ சர்க்கரைக்கு சமம் என தீர்ப்பு எழுதி தனது முதல் அத்தியாயத்தை முடிக்கிறார்.

முதல் அத்தியாயம் படித்து முடிந்ததும், வாசகர்கள், நம் பாரம்பரிய உணவு முறைகளை தவற கருதி அனைத்தையும் ஒதுக்கிவிட வேண்டும்,பிறகு மெல்ல அசைவ உணவு முறைக்கு மாறினால் கந்தர்வர்கள் போல் தோற்றம் கிடைக்கும் என ஆசை மனதில் துளிர்விட வேண்டும், என்ற நோக்கில் எழுதப்பட்ட முதல் அத்தியாயம், அதற்கான நோக்கத்தை சிறப்பாக நிறைவேற்றி இருக்கிறது.









சிரிப்பு நேரம். relax please


கேட்டதில் ரசித்தது.

"அழகியே தீயே" என்று ஒரு திரைப்படம் பிரகாஷ்ராஜ் மற்றும் பிரசன்னா ,நவ்யாநாயர் ,பாஸ்கர் போன்றவர்கள் நடித்திருப்பார்கள். அதில் பிரசன்னாவும் அவர்களுடைய நண்பர்களும் சேர்ந்து அவர்களின் வீட்டு ஓனர் பாஸ்கரை , அவர் போலீஸ் போல் இருப்பதாகவும், அவரை போலீஸ் வேடத்தில் நடிக்க வைப்பதாகவும் சொல்லி, போலீஸ் உடை அணிந்து அந்த வேடத்திற்கு பயிற்சி பெறுமாறு சொல்லுவார்கள்.அதேபோல் அவரும் மனதளவில் தன்னை ஒரு போலீஸ்காரராகவே நினைத்து கொண்டு மிடுக்குடன் படம் முழுவதும் வந்து போவார்.


இங்கு ஒரு பேலியோ குழுமத்தில்  நண்பர்கள் சிலர் விளையாட்டை போலீஸ் என சொன்னதை சீரியசாக எடுத்துக்கொண்டு மனதளவில் தன்னை ஒரு போலீஸ்காரராகவே நினைத்துக்கொண்டு மிகுந்த மிடுக்குடன் ஒரு நபர் அந்த குழுவில் வலம்  வந்து கொண்டு இருக்கிறாராம், வர வர உடை கூட போலீஸ்,மிலிட்டரி  சாயலிலே அணிந்து வருகிறாராம். அவருக்கு முன்னால் போலீஸ் போலீஸ் என புகழும் குழு நண்பர்கள் , முதுகுக்கு பின்னால் சிரித்து சிரித்து வயிறுவலியால் துடிக்கிறார்களாம்.இதை எல்லாம் அறியாத நமது அப்பாவி போலீஸ், குழுவில் டயட் கேட்கும் அப்பாவி மக்களை  எப்போதும் போல் அதட்டியபடி மிடுக்குடன் திரிகிறாராம். இந்த நிலை முற்றினால், பேலியோவால் குணப்படுத்தமுடியுமா என சில நண்பர்கள் அவர்களுக்குள் காமெடி விவாதம் செய்கிறார்களாம்.

Wednesday, October 26, 2016

காக்கையும் பேலியோவும்

முன்னோரு காலத்தில் ஒரு அடர்ந்த காட்டில் ஒரு அழகிய குளம் இருந்தது. அந்த குளத்தில் பல வாத்துகள்   கூட்டம் கூட்டமாக வாழ்ந்து வந்தன.அந்த குளத்தை ஒட்டி ஓங்கி வளர்ந்துள்ள ஒரு ஆலமரத்தில் காக்கைகள் ,குருவிகள் ,அணில்கள்  என பல்வேறு  பறவைகளும் விலங்குகளும் மகிழ்ச்சியாக வசித்து வந்தன. அந்த காக்கை கூட்டத்தில் உள்ள ஒரு தாழ்வு மனப்பான்மை கொண்ட காக்கை ஒன்றிற்கு தன் கருப்பு நிறத்தின் மேல் எப்போதும் ஒரு வருத்தம்,வெறுப்பு, தான் ஏன் குளத்தில் நீந்தும் வாத்துகளை போல  வெண்மையாக இல்லை, நான் மட்டும் வெள்ளையாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என அடிக்கடி அதன் நண்பணான  அணிலிடமும், சக காக்கைகளிடமும் புலம்பி திரியும். அதன் நண்பர்கள் நிறத்தில் என்ன இருக்கிறது , காக்கைகளின் இயறகை நிறம் கருப்பு,  இதில் அவமானம் என்ன இருக்கிறது, இருப்பதை  வைத்து மகிழ்ச்சியாக இரு என அறிவுரைகள் கூறினாலும் , அதன் காதில் எதுவும் விழுகவே இல்லை. குளத்தில் உள்ள வாத்துகளின்  நடவடிக்கைகளை தொடர்ந்து கவனித்து வந்த  காக்கை,ஒரு வில்லங்கமான முடிவுக்கு வந்தது.அதாவது  வாத்துகளை போல் வெண்மையாக மாற, வாத்துகளின் வாழ்க்கைமுறையை நாம் பின் பற்ற வேண்டும் என தீர்மானித்து , அதன் வாழ்க்கை முறையை வாத்துகள் போல் மாற்றி கொண்டது .அதன்படி பறக்காமல் எப்போதும் தண்ணீரில் எப்போதும் நீந்திக்கொண்டே இருப்பது,கா கா என கத்தாமல் வாத்துகள் போல் பேக்,பேக்  என கத்த முயல்வது , மரத்தின் மீது உறங்காமல் வாத்து கூட்டங்களுடன் தரையிலேயே படுத்து உறங்குவது போன்று தன்னை ஒரு முழு வாத்தாக நினைத்து வாழ தொடங்கியது..ஆரம்ப நாட்களில் மிகவும் சந்தோசமாக,நாம் வெள்ளையாவோம் என  மிகுந்த தன்னம்பிக்கையுடன் நீந்தி வந்தது.நாட்கள் கடந்தன, ஆனால் நிறம் மாறவில்லை , மாறாக தண்ணீரிலேயே இருந்ததில் அதன் இறகுகள் நனைத்து உதிர்ந்து ,அதன் உடல் நலம் மிக மோசமானது.பேக்,பேக்  என கத்த முயன்றதில் தொண்டை நரம்புகள் கிழிந்து உணவு உண்ண முடியாமல் போனது. பறக்க முடியாமல் சோர்ந்து போய் பறக்க முடியாமல் ஒருநாள்  குளத்தடியில் கிடக்கும்போது அந்த வழியாக வந்த தெருநாய் ஒன்று, அந்த காக்கையை கவ்வி சென்றது.

உடல் எடை குறைப்பில் மட்டுமே பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வந்த இந்த பேலியோ , இன்றைக்கு சிலரால் அனைத்து நோய்களுக்கும்  தீர்வுஎன போலியாய்  நம்முன்னால் நிறுத்த பட்டிருக்கிறது. பேலியோ டயட் ஒரு நீண்ட நாள் பின்பற்ற தகுந்த டயட் முறை அல்ல.பேலியோ டயட்டில் உள்ள முதன்மையான முக்கியமான பிரச்சனை ,நம் முன்னோர்கள் என்ன உணவு உண்டார்கள் என்பதை பற்றி உறுதியாக எதுவும் நமக்கு தெரியாதது தான். பேலியோ காலத்தில்  பல்வேறு பகுதியில் வசித்து வந்த நம் முன்னோர்கள் , அந்தந்த  நிலப் பரப்புக்கேட்ப  அங்கு கிடைக்கும் உணவு பொருள்களை கொண்டு உணவு முறைகளை அமைத்துக்கொண்டார்கள். அவர்களின் தினசரி உணவில் தினமும் அசைவ உணவுகள் இருந்திருக்கும் என உறுதியாக கூற  முடியாது , அது அவர்களின் வேட்டையின் வெற்றியை பொறுத்தே அமையும்.. அது மட்டுமின்றி உலகின் பல பகுதிகளில் கிடைத்துள்ள  தானியம் அரைக்கும் கற்களை ஆராய்ந்ததில் அவை 30000 வருடங்கள் முந்தையாக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள்  கூறுவதை பார்க்கும்போது , பேலியோ காலத்தில் தானியங்கள் உபயோக படுத்த படவில்லை எனவும் உறுதியாக எதையும் கூற இயலாது.

அதுபோல இந்த 10000 ஆண்டுகளில் நமது ஜீன்கள் எந்த மாற்றத்திற்கும் உட்படவில்லை என்பதும் மிக பெரிய அனுமானமே , அதற்கான ஆராய்சிகள் பல இன்னும் முடிவடையவில்லை. அதேபோல் நமது குடலில் வாழும் பாக்டிரியாக்கள் மற்றும் நுண்ணுயிரிகள் அப்படியே நமது முன்னோர்களுக்கு உள்ளது  போல் உள்ளதா? அவையும் எந்த மரபு மாற்றத்திற்கு உட்படவில்லையா என்பன அனைத்தும் மிக பெரிய கேள்விகளே?

அதேபோல் அவர்கள் உண்ட அசைவ உணவின் தரம் என்ன? இப்போது பண்ணைகளில் ஹோர்மோன்,ஆன்டி பயாடிக் ஊசிகள் மூலம் வளர்க்கப்படும் இறைச்சிகளின்  தரம்  என்ன?

என ஓராயிரம் கேள்விகள் ?

இவை எவற்றிற்கும் தெளிவான பதில் இல்லை, அனைத்தும் அனுமானமே. இந்த அனுமானங்களுக்கு உங்கள் உயிரை பணயம் வைக்க தயாரா? யோசியுங்கள் சிறு தானியங்கள்,நஞ்சில்லா காய்கறிகள்,பழங்கள் போன்ற இயல்பாக எளிதாய் கிடைக்கும் உணவு பொருளை உண்டு ஆரோக்கியமாக வாழ்வதை விட்டு ,வாத்தைபோல் மாற நினைக்கும் காக்கையாய்  ,ஆதிமனிதனாக முயற்சி செய்தால் ,உறுப்புகள் சேதப்பட்டு இருக்கும் ஒரு வாழ்க்கை நரகமாகும் என்பதே உறுதி.  இன்னும் நீங்கள் தாவர இலைகளில் உடை அணிவது,விலங்கு தோள்களில் உடை அணிவது ,மரத்தின் மீது  ஏறி வசிப்பது போன்றவை செய்தால் , முன்னோர் போல் நாமும் ஆரோக்கியமாக வாழலாம் என சென்றால், உங்கள் தலைவிதி மாற்ற பட முடியாதது.

Tuesday, October 25, 2016

படுக்கை அறை கேமரா

உங்கள் படுக்கை அறையில் ஒரு கேமரா வைத்து அங்கு நடப்பவற்றை பதிவு செய்து நீங்கள் facebook -ல்  upload  செய்விர்களா?

மாட்டீர்கள் தானே! பிறகு ஏன் உங்கள் மருத்துவ அறிக்கையை பல ஆயிரம் பேர் வந்து போகும் ஒரு குழுவில் பொதுவில் பதிவிடுகிறீர்கள்.உங்களுக்கு தெரியுமா "டெஸ்டோஸ்டெரோன்" ஹோர்மோன் அளவுகளை வைத்து கொண்டு மிகவும்  எளிதாக உங்கள் செக்ஸ் வாழ்க்கையை கணித்து விடலாம். "டெஸ்டோஸ்டெரோன்"  அளவுகளை பதிவிடுவதும், ஒரு விதத்தில் கேமரா வைத்து அங்கு நடப்பவற்றை ஒளிபரப்புவது போன்றே. உங்களை சுற்றி உள்ள உங்கள் நண்பர்கள் ,உறவினர்கள் ,எதிரிகள் என அனைவரும் இது போன்ற  தகவல்களை  வைத்து கொண்டு உங்களை influence செய்து விட முடியும். இலவச ஆலோசனை என்றால் , ஒன்றும் கண்ணுக்கு தெரியாது. கொஞ்சமாவது யோசியுங்கள்.

அமெரிக்கா  சென்று சிலகாலம் அங்கு தங்கியிருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு மேதாவிதனம்  வந்துவிடுகிறது, உடல் நலம் சரி இல்லாத தன் வெள்ளைக்கார நண்பணை  விசாரிக்கும்போது "இப்போது எப்படி இருக்கிறீர்கள்?"  என்று மட்டுமே கேட்க முடியும் , அதை தாண்டி  "உங்கள் உடல் நிலைக்கு என்ன?" என்று கேட்க முடியாது ,கேட்டால் அது மிகவும் அந்தரங்கமான கேள்வியாக பார்க்கப்படும்.நாளைடைவில் இவர்களும் இதையேதான் மற்றவர்களிடம் எதிர்பார்கிறார்கள் , ஆனால் இங்கு இந்திய ஆட்டு மந்தை கூட்டங்கள்  என்றால் பல ஆயிரம் பேரை கொண்டுள்ள ஒரு குழு மேடையில் ,தங்கள் மருத்துவ அறிக்கையை பொதுவில் பதிவிட்டு ,தங்கள் பிரச்சனைகளை சொல்லி கதற வேண்டும் என எதிர்பாகிறார்கள். இதை கேட்டால் , நாங்களா  கேட்க சொன்னோம் ,தேவை என்று அவர்கள் தானே வருகிறார்கள் என்று ஒரு போலீஸ்காரர் கண்கள் சிவக்க கோபத்துடன் வருவார்.

மற்றவர்களின் அந்தரங்கதிற்கு  உரிய மரியாதை கொடுங்கள், இன்று மிக பெரும்பான்மையான முகநூல்(facebook) உபயோகிபாளர்களுக்கு சைபர் கிரைம் மற்றும் அவர்களுடைய தகவல்களின் முக்கியம் தெரிவதில்லை.

ஆரோக்கியத்துடன் கொஞ்சம் டெக்னாலஜியும் தெரிந்து வைத்து கொள்வோம்.

ஆண்மை குறைபாடும் பேலியோவும்.

டெஸ்டோஸ்டெரோன் எனப்படுவது ஆண்களின் உடலில் சுரக்கும் ஒரு முக்கிய ஹார்மோன். இது தான் ஒரு  ஆண்குழந்தை  வளர்ந்து முழு ஆண்மகனாக உருமாற  உதவிசெய்வது. ஆண்களுக்கு உரிய இயல்பான மீசை ,தாடி,உடல் ரோமங்கள் ஆகியவற்றின் வளர்ச்சிகளை உறுதிப்படுத்துவது,எலும்புகளுக்கு வலுவளித்தல் ,பாலுணர்ச்சியை தூண்டுவது ,தோள் ,கைகள் ,கால்கள்,மார்பு போன்றவற்றிக்கு ஆண்களுக்குரிய தோற்றத்தையும் மிடுக்கையும் கொடுப்பது.இதேபோல் ஈஸ்ட்ரோஜென் எனப்படும் ஹோர்மோன் பெண்களின் உடலில் சுரப்பது ,இது பெண்களின் மென்மை,மார்பக வளர்ச்சி,மற்ற பெண்மை தொடர்பான அனைத்திற்கும் இந்த ஹோர்மோன் தான் காரணம். ஒவ்வொரு ஆணின் உடலிலும்  டெஸ்டோஸ்டெரோன் மட்டுமின்றி பெண் ஹார்மோனான ஈஸ்ட்ரோஜெனும் சிறிதளவு சுரக்கிறது, இதேபோல் பெண் உடம்பிலும் ஆண்  ஹார்மோனான டெஸ்டோஸ்டெரோன் குறைந்த அளவில் சுரக்கிறது... ஆணின் உடலில்  ஈஸ்ட்ரோஜென் சுரப்பு அதிகரிக்கும்போது,ஆணிடம் பெண்தன்மை அதிகரிக்கும் அப்போது   நடை,பேச்சு,நளினம் போன்றவை  பெண்களை போன்றே இருக்கும் ,அதே போல் பெண்களுக்கு டெஸ்டோஸ்டெரோன் அதிகரிக்கும்போது அதிக உடல் ரோமா வளர்ச்சி,ஆண்கள் போல் கரகர குரல் போன்ற  தோன்றும்.

பொதுவாக இந்த டெஸ்டோஸ்டெரோன் அளவுகள் 20 வயதை கடந்தவுடன் படிப்படியாக குறைய துவங்கும்.18 வயதிலிருந்து 20 வயதுவரை இதன் அளவுகள் ஆணின் உடலில் மிக உச்சத்தில் இருக்கும், அப்போது ஆண்கள் மிகவும் துடிப்புடன் இருப்பார்கள் ,இந்த பருவத்தை தான்  கிராமப்புறங்களில் இளமைமுருக்கு என கூறுவார்கள்.இந்த டெஸ்டோஸ்டெரோன் அளவு உடலில் குறையும் போது உடலில் சக்தி குறைவு, உடல் தசைகள் வலுவிழத்தல் ,விறைப்பு தன்மை குறைதல், கவனக்குறைவு மற்றும் சோர்வடைதல்,எலும்புகள் பலகீனம் , பாலுணர்வில் நாட்டமின்மை  போன்றவை இயல்பாக தோன்றும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.."இன்றைய காலகட்டங்களில் வயதாவது மட்டும் டெஸ்டோஸ்டெரோன் அளவுகள் குறைவதற்கு காரணமல்ல, நமது உணவு பழக்க வழக்கங்கள்,உடல் நிலை பேணும் முறை போன்றவையே டெஸ்டோஸ்டெரோன் அளவுகளை பெரும்பாலும் தீர்மானிக்கிறது" என கூறுகிறார் பிரபல  சிகாகோ பல்கலைக் கழக  ஆராய்சியாளர் ஈவ் வான்.

சரி எதனால் டெஸ்டோஸ்டெரோன் அளவுகள் குறையும்?

உடற்பயிற்சியின்மை
போதிய உறக்கமின்மை (தொடர்ச்சியாக 5 மணி நேரத்திற்கும் குறைவாக உறங்குவது.. )
மனஅழுத்தம்
hiv/கான்செர் போன்ற நோய்களால்
கீமோதெரபி  சிகிச்சை
SHBG(Sex hormone-binding globulin) ப்ரோட்டீன் அளவுகள் ரத்தத்தில் மிக அதிகமாக இருப்பது.


மேற்கண்ட நான்கில் ,அதில் SHBG யினால் ஏற்படும் பாதிப்புகளை பற்றி சற்று விரிவாக பார்ப்போம்.ஏனென்றால் இவர்  தான் பேலியோவுக்கும் மிக நெருங்கிய உறவினர்.SHBG எனப்படுவது கல்லிரலில் உருவாகும் ஒரு புரத வகையை சார்ந்தது இது  டெஸ்டோஸ்டெரோன்,ஈஸ்ட்ரோஜென் மற்றும் டிஹைட்ரொடெஸ்டோஸ்டெரோன்(testosterone, dihydrotestosterone (DHT), and estradiol) போன்றவற்றை ஒன்றிணைத்து தன்னுள்கொண்டு ரத்தத்தில் கலந்து பின் அனைத்து திசுக்களுக்கும் தன்னை அளிக்கிறது , மேலும்  திசுக்கள் எவ்வளவு டெஸ்டோஸ்டெரோனை எடுத்து கொள்ள வேண்டும் என்பதையும்  இதுவே தீர்மானிக்கிறது..இன்சுலின் என்ற ஹோர்மோன் தான் SHBG யில் டெஸ்டோஸ்டெரோனையும் மற்ற ஹோர்மோன்களையும் பிணைப்பதில்  முக்கிய பங்கு வகிக்கிறது.உடலில் இன்சுலின் அளவு தொடர்ச்சியாக மிக குறைவாக இருக்கும்போது இந்த ஹோர்மோன் பிணைப்பில் ஏற்படும் கோளாறுகளால் SHBG அளவு ரத்தத்தில் மிக உயர்ந்து உடலில் சுரக்கும் டெஸ்டோஸ்டெரோனை அனைத்து திசுக்களுக்கும் கிடைக்காமல் செய்து விடுகிறது..t ype 2 நீரிழிவு நோயாளிகள், சர்க்கரை நோயை வெல்கிறேன் என்ற பெயரில் பேலியோ  டயட் மூலம் தொடர்ச்சியாக (low corb ) மிக குறைந்த மாவு சத்துள்ள உணவு பொருட்களை எடுக்கும்போது ,உடலில் இன்சுலின் அறவே இல்லாத சூழ்நிலை ஏற்பட்டு SHBG,டெஸ்டோஸ்டெரோன் பிணைப்பில் சிக்கலை உருவாக்கி சில வருடங்களில் அவர்களை முழுமையான மலட்டு தன்மை உடையவர்களாக மாற்று விடுகிறது...உடலில் இன்சுலின் போதிய அளவு சுரக்காவிட்டாலும் ,மாத்திரை மூலமாகவோ , ஊசி மூலமாகவோ இன்சுலின்  கட்டாயம் எடுத்து கொள்ளவேண்டும். இன்சுலின் பற்றாக்குறை குளுகோஸை திசுக்களுக்கு அளிப்பது மட்டுமின்றி இன்னும் பல முக்கியமான உடல் செயல் பாடுகளுக்கு அவசியம் என்பதையும்  புரிந்து  கொள்ளவேண்டும் .

பிரபல பாலியல் மருத்துவர்  டானியல் ஸ்டிக்களேர் (Daniel Stickler) ,சமீப காலங்களில் பேலியோ உணவுமுறையை பின்பற்றுபவர்கள் ,பாலியல் பிரச்சனையால் பாதிக்கபடுபவர்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக கூறுகிறார். அவரிடமும் வரும் பேலியோ நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக கூறுகிறார்.

http://primaldocs.com/members-blog/testosterone-shbg/

The following can cause increased SHBG levels:


liver disease (hepatitis, alcohol)
low insulin levels (healthy people, especially eating paleo)
calorie restriction
green tea
increased protein/carb ratio (paleo eating)
certain medications


எனவே  அரைவேக்காட்டுத்தனமான ஆங்கில கட்டுரைகளின் மொழிபெயர்புகளை  நம்பாமல் , உங்கள் மருத்துவர் என்ன சொல்கிறாரோ அதை பின் பற்றுங்கள்.கைப்புண்ணை குணப்படுத்த கண்ட  புத்தகங்கள்  படித்து பின் கையை இழந்தவன் கதைபோல் ஆகிவிடும்.எனவே  அறிவுபூர்வமாக செயல்படுவோம் , படித்த அறிஞர்கள் சொல்லும் வழி  நடப்போம்.வலைபூ மேயும் நண்பர்களின் மருத்துவ அறிவில் , உங்கள் டயட் மற்றும் வாழ்க்கையை தேட வேண்டாம்.

Monday, October 24, 2016

விரைவில் "பேலியோ டயட்" புத்தகத்தின் திறனாய்வு கட்டுரை..

விரைவில் "பேலியோ டயட்"  புத்தகத்தின் திறனாய்வு கட்டுரை.. அதன் அனைத்து அத்தியாயமும் (chapters), அதனுடைய உண்மை தன்மையும், தகவல் எடுத் தாளப்பட்ட இணைய கட்டுரைகளின்(sources) நம்பக தன்மை பற்றியும் ஒவ்வொரு அத்தியாயமாக  விரிவாக அலசி ஆராயப்படும்.. விவாதத்தில் அனைவரும் பங்குபெறலாம், கருத்துக்களை பரிமாறி கொள்ளலாம்...

Saturday, October 22, 2016

பண்ணைக்கோழியும் பரலோக பயணமும்..

       ஏதேச்சையாக நேற்று ஒரு பேலியோ குழுவில்,அக்குழுவின்  முக்கிய நபராக கருதப்படும் ஒரு நண்பர் எழுதிய  பண்ணைகோழி பற்றிய கட்டுரையை படிக்கச் நேர்ந்தது.அவரை பின்தொடரும் பல்லாயிர கணக்கான மக்களுக்கு அவரது பரிந்துரை "தைரியமாக பண்ணைக்கோழிகள் உண்ணலாம் , அதனால் ஒரு பின் விளைவுகளும் கிடையாது." என்பது , அதை அவர் மிக உறுதியாக பதிவு செய்திருந்தார்.. அவர் குழுவில் உள்ள ஒரு விலங்கியல் மருத்துவரும் , 10 வருடங்களாக கோழிபண்ணை ஒன்றை நடத்திவரும்  முட்டை வியாபாரி ஒருவரிடமிருந்தும்  பெற்ற தகவல்களை கொண்டு அந்த ஆராய்சி கட்டுரை எழுதி இருப்பதாகவும் , பண்ணை கோழிகளுக்கு கொடுக்கப்படும் ஆண்டிபயாட்டிக்குகள் சிறிதளவும் ஆபத்தற்றவை எனவும் ,அவை  மனிதனுக்கு மிக மிக மிக அரிதாகவே பாதிப்பை உண்டு செய்யும்.உண்டு செய்யாது ,உண்டு செய்யாலாம் என்ற அச்சம் மட்டுமே ஆராய்ச்சியாளர்களுக்கு உண்டு என்றும் கூறி  இருக்கிறார்(இந்த உண்மை அறியாமல் அமெரிக்க ,ஐரோப்பிய நாடுகள் , தாங்கள் நாட்டில் அந்த ஆபத்தற்ற ஆண்டிபயாட்டிகளை கொண்ட சிக்கனை தடை செய்திருக்கிறார்கள் ) ,கோழிகளுக்கு ஹோர்மோன்கள் ஊசி செலுத்தினால் அவை இறந்துவிடும் என்பதும் ஒரு புதிய தகவல்..

இக்கட்டுரையால் ,போதி மரத்தடியிலில் அமர்ந்தெழுந்த புத்தன் போல்  ஞானம் பெற்ற பேலியோ கண்மணிகள், வழக்கம்போல் தங்கள் ஆனந்த கண்ணீரால் ,முகநூல் விமர்சன பக்கங்களை நனைத்து கொண்டிருக்கிறார்கள்...சரி இனி நம் கதையை பார்ப்போம்.

மக்கள்தொகை பெருக்கம், மட்டன் மட்டும்  நாட்டுக்கோழி போன்ற அசைவ உணவுகள் அனைவருக்கும்  கிடைப்பதன் சாத்தியத்தை பெரும் அளவு  குறைத்துவிட்டது என்றே சொல்லலாம்.இவைகளின்  விலை(கிலோ 400 ரூபாய்), சாதாரண மனிதர்களுக்கு  வாரம் ஒருமுறை வாங்கி உண்ணும் அளவுகூட
வாய்ப்புகள் அளிக்கவில்லை..தற்போது நாட்டு கோழிகள் பற்றாக்குறைக்கும் , பொருளாதார நிலையில் பின்தங்கி இருப்போரின் அசைவ தேவைகளுக்கும் , வடிகாலாக இருந்து வருவது பிராய்லர் சிக்கன் எனப்படும் பண்ணை கோழிகள்..பண்ணை கோழிகளின் தீமைகள் பற்றி  ஊடகங்கள் &செய்திகள் வாயிலாக மக்கள் ஓரளவு அறிந்திருந்தாலும் , தன்  பொருளாதார நிலை கருதியும் ,இதன் சுவைக்காகவும்  , உடல் நலனுக்கு கேடு என தெரிந்தும்  , வாரம் ஒரு முறைதானே ,என்ன ஆகிவிட போகிறது என தனக்கு தானே ஆறுதல் கூறிகொண்டு இதனை உண்டு வருகிறார்கள்..

பிராய்லர் கோழி என்பது உலகின் இறைச்சியின் தேவையை சரிக்கட்ட, சாதரண 200 நாட்கள் வளரும் நாட்டுக்கோழிகளின்  மரபணுவில் மாற்றம் செய்து ,குறுகிய காலத்தில் மிக அதிக எடையுடன் வளர  உருவாக்கப்பட்ட கோழிவகை. 45 நாளில் 2.5 கிலோ எடையை அடைவது , மிக எளிதான காரியமல்ல,இதற்கு  இவை எண்ணற்ற மரபணு மாற்றத்திற்கு  உட்பட்டிருக்கும், உதாரணமாக பசிக்கிறதோ  இல்லையோ கோழி தொடர்ந்து, தீவனம் தின்றுகொண்டே இருக்கவேண்டும், எனவே எப்போதும் பசியுடன் இருக்குமாறும்,தண்ணீர்தாகம் அதிகம் எடுக்குமாறும் , இதற்கு தக்கவாறு ஹோர்மோன்கள்& அமிலங்கள்  சுரக்குமாறும், அதேபோல் கோழிகளுக்கு  அதிகம் நடக்க தோன்றக்கூடாது என்பதற்க்காக கோழியின் கால்களுக்கு வலு மிக குறைவாக இருக்குமாறும்( நடந்தால் எடை குறையும் ) , இதுபோல எண்ணற்ற மரபணு மாற்றங்களினால் இந்த கோழிகளின்  உடல் இயங்கும் முறை மற்றும் ஹோர்மோன்கள் செயல்பாடு  முற்றிலுமாக மாற்றியமைக்கப்படுகிறது..மாற்றியமைக்கப்பட்ட  உடல் கூறுகளால்  இவைகளின் நோய்எதிர்ப்பு சக்தி  முற்றிலுமாக அழிக்கப்பட்டு மிக சிறிய நோய்த்தாக்கத்தை கூட தாங்கும் வல்லமையை இழந்துவிடுகிறது. வெப்ப நிலையில் சற்று அதிகரித்தால் கூட கோழிகள் இறந்துவிடும், பண்ணை வைத்து இருப்பவர்கள்  வெப்ப நிலை சிறிது அதிகமானாலும்  உடனடியாக நீர்தூவி(sprinler ) பயன்படுத்தி பண்ணைகளின் வெப்பநிலையை குறைப்பார்கள்.

சரி சிறு வெப்பத்தை கூட தாங்காத இந்த கோழிகள் எப்படி பறவை காய்ச்சல் ,சளி (ஆமாம், வேறு தண்ணீர் மாற்றினால் ,மனிதர்கள் போல், இவற்றுக்கும் சளி பிடித்து கொள்ளும்) போன்றவற்றை தாங்கும்??

ஆன்ட்டி பயாடிக் தான் வேறென்ன?

பிராய்லர் கோழிகளுக்கு நோய் வராமல் இருக்க மிக  அதிகமாக ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் தீவனங்கள் மூலமாகவும்,ஊசி மூலமாகவும் கொடுக்கப்படுகிறது. ஆனாலும் அனைத்து கோழிகளையும் இந்த  ஆன்ட்டி பயாடிக்களால் குணப்படுத்தக்கூடியமுடிவதில்லை(ஒருவர் 5000 கோழிகள் பண்ணையில்  வளர்த்தால்,அதில் குறைந்தபட்சம் 500 கோழிகள் கட்டாயம் சாகும், உங்கள் நண்பர்கள் யாரவது இத்துறையில் இருந்தால் ,கேட்டு உறுதி படுத்தி கொள்ளுங்கள் ),, மேலும் இறைச்சியை சாப்பிடும் நம்முடைய உட‌லி‌ல் உ‌ள்ள இயல்பான நோ‌ய் எ‌தி‌ர்‌ப்பு ச‌க்‌தி கடுமையாக பா‌தி‌க்க‌ப்படுகிறது.தொடர்ச்சியாக பிராய்லர் கோழி சாப்பிடுபவர்களுக்கு  சளி & காய்ச்சல் போன்ற நோய்களுக்கு டாக்டர்கள் அளிக்கும் சாதாரண ஆன்டிபயாட்டிக் மருந்துகள் வேலை செய்யாது, இதனால் டாக்டர்கள் மருந்தின் வீரியத்தை அதிகப்படுத்துவார்கள். மருந்தின் வீரியம் அதிகமானால் பல பக்க விளைவுகள் ஏற்படும்..

 கடந்த 2014-ல் , சிஎஸ்இ(Centre for Science and Environment)-யால்   டெல்லி ,நொய்டா, குர்கான் போன்ற பகுதிகளில் மொத்தம் 70 கோழிகள் ஆய்வுக்கு எடுக்கப்பட்டன. அந்த கோழிகளின்  கிட்னி,ஈரல், தசை  என பல்வேறு உறுப்புகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன, அதில்  40 சதவீத கோழிகளுக்கு அளவுக்கு அதிகமாக ஆன்டி பயாட்டிக் கொடுக்கபட்டிருப்பது  தெரியவந்தது.

முக்கியமாக 6 வகையான ஆன்ட்டி பயாடிக் மருந்துகள்  கோழிவளர்ப்பில் வழங்கப்பட்டு  வருகிறது,அவை  ஆக்சிடெட்ரா சைக்ளின், குளோர்டெட்ராசைக்ளின், ,டாக்சிசைக்ளின், என்ரோபிளாக்சசின், சிப்ரோபிளாக்சசின், நியோமைசின் ஆகியவை இதில் கடைசி 4 ஆன்ட்டி பயாடிக் வகைகளும் அளவுக்கு மிக அதிகமாக அளவு பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிஎஸ்இ நடத்திய ஆய்வில் ஆன்ட்டி பயாடிக் வகைகள்  பரிசோதிக்கப்பட்ட அனைத்து கோழிகளிலும் ,இந்த 4 ஆன்ட்டி பயாடிக் வகைகள் அதிகமாக  முறையற்று பயன்படுத்தி இருப்பதை கண்டுபிடித்து உறுதிபடித்தியுள்ளனர்  சிஎஸ்இ ஆய்வாளர்கள். சிஎஸ்இ  நடத்திய மொற்றொரு ஆய்வில்  2002ம் ஆண்டிலிருந்து 2013ம் ஆண்டுவரை தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் பெரும்பாலான நோயாளிகளுக்கு சிப்ரோபிளாக்சசின், ஆக்சிடெட்ரா சைக்ளின், டாக்சிசைக்ளின் போன்ற ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் வேலை செய்யாதது கண்டுபிடிக்கப்பட்டது.மேலும் கிலோவுக்கு மூன்று  முதல் நூற்றி ஐம்பது  மைக்ரோகிராம் ஆன்ட்டி பயாடிக் மருந்துகளின் படிவுகள் சிக்கன் கறியில் இருப்பதாக  பிற ஆய்வுகள்  தெரிவிக்கின்றன. பொதுவாக  சிப்ரோபிளாக்சசின் என்பது  அனைத்து நோய்களையும் எதிர்க்கும் ஆன்ட்டி பயாடிக்  மருந்தாகும்.  ஆனால் சிக்கன் தொடர்ச்சியாக உண்பவர்களுக்கு இது வேலை செய்யாது ,இதன் பலனை மனித உடல் இழக்கும்போது கான்சர் தேவையில்லை  சாதாரண டைபாய்டு காய்ச்சல் மனித உயிரை பலி வாங்கிவிடும். மேலும் இறைச்சி உற்பத்தித் தொழிற்துறையில் அதிகமாக ஆன்ட்டி பயாடிக் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க அரசு கடும் சட்டங்களையும் கண்காணிப்பு முறையையும் கொண்டு வரவேண்டும் என்கிறது சி.எஸ்.இ.அமெரிக்க & ஐரோப்பிய போன்ற மேலை நாடுகளில் இதற்கு கடுமையான சட்டங்கள் உள்ளன. ஆனால்  இந்தியாவில் இதற்கென தனியான சட்டங்களோ ,வழிமுறையோ  பின்பற்றப்படுவது இல்லை...

பேலியோ டயட் என்ற பெயரில் ஆரோக்கியமாக வாழ தினமும் சிக்கன் வேண்டுமளவு உண்ணுமாறு  ஒரு குழுவில் பரிந்துரை செய்யபடுகிறது. அமெரிக்காவில் வாழும் நண்பர்கள் , எதை வேண்டுமானால் பின்பற்றலாம், எப்படியும் இருக்கலாம். ஏனென்றால் அங்கு உணவு தர கட்டுப்பட்டு வாரியம்  மிகுந்த அக்கறையுடன் அந்நாட்டு மக்களை பாதுகாக்கிறது.இங்கு இந்தியாவில் கதை வேறு. கோழி பண்ணையில் நோயால் செத்த கோழிகளை , கிலோ 25 ரூபாய் என மிக பெரிய உணவகங்கள் கூட வாங்கி சென்று சமைத்து பிரியாணி ,சில்லி சிக்கன் என மேல் தட்டு மக்களுக்கே விற்கிறார்கள்.இதில் ஆன்ட்டி பயாடிகாவது ,அங்கிள் பயாடிகாவது.இங்கு இதையெல்லாம்  கண்டுகொள்ள எவரும் இல்லை.

தயவு செய்து பேலியோ போன்ற மாய டயட்களை பின்பற்றி அப்பாவிகளாக உயிரை விட வேண்டாம்.அப்படியே பேலியோ பின்பற்றினாலும் சிக்கனை கண்டிப்பாக தவிர்த்து விடவும்...பண்ணை கோழிகளுக்கு ஆதரவாக கட்டுரை எழுதிய  நண்பருக்கு ஒரு வேண்டுகோள்...அமெரிக்காவில் செய்யும் /பின்பற்றும் அனைத்தையும்  இந்தியாவில் செய்ய முடியாது,புரிந்து கொள்ளுங்கள்.நல்லதோ கெட்டதோ நீங்கள் சொல்வதை நம்பும் ஒரு கூட்டம் உள்ளது அவர்களுக்கு நல்லவழி காட்டுங்கள். இது போன்ற தவறான தகவல்கள் வேண்டாம்.

sources:
இந்த லிங்கில் உள்ள விடியோவை பார்க்கவும் ,செய்தியையும் படிக்கவும்.
http://www.firstpost.com/living/chicken-lovers-beware-breeders-in-india-use-antibiotics-to-make-birds-fatter-1642335.html
http://timesofindia.indiatimes.com/city/kolkata/Poultry-goods-can-harm-your-system/articleshow/6811893.cms
http://www.thehindu.com/sci-tech/health/policy-and-issues/antibiotics-in-the-chicken-we-eat/article6376564.ece



இணையத்தில் இது தொடர்பாக  எண்ணற்ற தகவல் உள்ளன ,சிறுது நேரம் செலவிட்டு தேடி பார்த்து தெளிவு பெறுங்கள்...உங்கள் ஆரோக்கியத்திற்கு நீங்கள் தான் உழைக்க வேண்டும் , மற்றவரின் உழைப்பை எதிர்பார்த்தால்,  உங்களை அவர்கள் லாபத்திற்கு பலிகொடுக்கும்  வெள்ளாடாகவே பார்ப்பார்கள்.. 

Thursday, October 20, 2016

கிட்னி செயலிழப்பு!!

"கிட்னி செயலிழப்பு மற்றும் கிட்னி சம்மந்தமான நோய்கள், சாதாரண உணவு உண்பவர்களை விட அசைவ ப்ரோடீன் அதிகம் எடுப்பவர்களுக்கு மூன்று மடங்கு அதிகம் ". இது அசைவ புரதங்களை பற்றி தலைசிறந்த மருத்துவ ஆராய்ச்சியாளர் டாக்டர் வெஸ்ஸின் அவர்களுடைய கருத்து .மேலும் அவர் முதல் கொஞ்ச நாட்கள் இந்த அசைவ புரத உணவுகள் உடலுக்கு நன்மை தருவது போல் தோன்றினாலும் , தொடர்ச்சியாக எடுக்கும்போது இது கிட்னி செயலிழப்பில் முடியும் என்று கூறுகிறார்.
மேலும் நீங்கள் கூகிள்லில் "animal protein + kidney disease " என தேடினால் அனிமல் ப்ரோட்டினினின் தீமைகளை விளக்கும் பல ஆராய்ச்சி கட்டுரைகளை காணலாம்.. வாரம் ஒருமுறை அதிக பட்சம் இருமுறை அசைவ உணவுகள் உண்பதுவும் , சரியான அளவில் புரதங்களை எடுப்பதும் நீண்டநாள் கிட்னியை பாதுகாக்கும் சரியான வழிமுறை.

பேலியோவும் கிட்னி சட்னியும்...

நமது உடல் 20 சதவீதம் புரதங்களால்(ப்ரோடீன்) ஆனது. புரதங்களை நமது உடலில் சேமிக்க முடியாது என்பதால் , தினசரி உணவில் சரியான அளவு புரதங்களை எடுத்துக்கொள்வது என்பது ஆரோக்கியமான உடல்நிலைக்கு மிகவும் அவசியமானதாகும்.நாம் புரதங்களை தாவரங்களில் இருந்தும் அசைவ உணவுகளான இறைச்சி முட்டை போன்றவற்றில் இருந்தும் எடுத்து கொள்கிறோம் .தாவரவகை புரதம் உயர்ந்தது எனவும் அசைவ உணவு புரதங்களே சிறந்தது எனவும் பல்வேறு கருத்துக்கள் மருத்துவ உலகில் உள்ளது.. FDA வின் பரிந்துரை என்பது உடல் எடை ஒரு கிலோவுக்கு 0.8 கிராம் புரதம் எடுத்து கொள்ளவேண்டும் அதாவது சராசரியாக ஒரு நபருக்கு உடல் சீராக இயங்க 50 முதல் 60 கிராம் புரதம் ஒரு நாள் ஒன்றுக்கு தேவை படுகிறது...Reference (http://www.fda.gov/…/Guidan…/LabelingNutrition/ucm064928.htm)... தாவர வகை புரதமோ விலங்கு வகை புரதமோ ,இந்த அளவுக்கு மேல் தொடர்ச்சியாக உட்கொண்டால் அது நமது உடல் நிலையை எப்படி பாதிக்கும் என்றும் ,.நமது பேலியோ டயட் பின்பற்றும் ஞானிகளின் கிட்னி எப்படி சில வருடங்களில் சட்னி ஆகும் என்பதை பற்றி சற்று விரிவாக பார்ப்போம்.
புரதம் என்பது சிறிய அளவினாலான அமினோ அமிலங்களின் தொகுப்பாகும் ,இவை உடல்திசுக்கள் மற்றும் செல்களின் கட்டமைபிற்கும்,தசை, திசுக்கள் மற்றும் இரத்தம் போன்ற முக்கிய உடல்திரவங்களின் உருவாக்கத்திற்கும் முக்கிய மூலபொருளாகும். இந்த அமினோ அமிலங்கள் இரண்டு வகையாக பிரிக்க படுகிறது.ஒன்று அத்தியாவசிய அமினோஅமிலங்கள் (Necessary Amino Acid ), மற்றொன்று அத்தியாவசியமல்லாத அமினோஅமிலங்கள் ( Unecessary Amino Acid ).
அத்தியாவசியமல்லாத அமினோஅமிலங்கள் என்பது உணவின் மூலம் பெறப்படாதது ,உடலே தேவைக்கு தகுந்தாற்போல் உணவில் உள்ள நைட்ரஜன் மூலம் இதனை உருவாக்கி கொள்ளும். உதாரணமாக சாரின் ,குளூட்டமின் போன்றவற்றை கூறலாம்.. இதனால் நமக்கு எந்த பிரச்னையும் இல்லை எனவே இதனை நாம் தவிர்த்து அத்தியாவசிய அமினோஅமிலங்கள் பற்றி மட்டும் சற்று விவரமாக பார்ப்போம் .. இந்த அமினோ அமிலங்களின் வகையையும் அது கொண்டுள்ள அளவையும் வைத்தே அசைவ உணவு புரதங்கள் (animal protein ) , தாவர புரதங்களை(plant protein ) விட உயர்ந்ததாக கருதப்பட்டு வருகிறது..செல் மற்றும் திசுக்கள் கட்டமைக்க ,புணரமைக்க 20 வகையான அமினோ அமிலங்கள் நமது உடலுக்கு தேவை படுகின்றன , விலங்கு புரதங்களில் இந்த 20 வகையான அமினோ அமிலங்களும் முழுமையாக கிடைப்பதாலும் ,தாவர புரதங்களில் உடலுக்கு தேவையான முக்கிய புரதங்களான மேதினின் ,ட்ரிப்டோபான் ,லைசின்,ஐசோலியூஸின் மிக குறைந்த அளவே காணப்படுவதாலும் , விலங்கு புரதங்கள் உடலுக்கு தாவர புரதங்களை விட நன்மை பயக்கின்றன என கூறப்படுகிறது..ஆனால் இதற்கு விலங்கு புரதங்கள் இல்லாமல் உடல் செல் & திசு கட்டமைப்புகள் போன்றவை ஒன்றும் நடைபெறாது என்று பொருள் கிடையாது.. சைவ உணவை மட்டுமே உண்டு மிகவும் ஆரோக்கியமாக ,எந்த நோயும் இல்லாமல் 100 வருடங்கள் வாழ்ந்த பலரை நாம் பார்த்து இருக்கிறோம்...
சரி விஷயத்துக்கு வருவோம்..நம் உடல், நாம் உண்ட உணவு பொருளில் இருந்து தேவையான புரதங்களை பிரித்தெடுக்கும்போது குறிப்பாக பியூரின் (purine) எனப்படும் மூலப்பொருள் அதிகமாக கொண்ட புரதங்களை பிரித்தெடுக்கும்போது அதன் கழிவாக யூரிக் ஆசிட் (uric acid ) எனும் அமிலம் வெளியேற்றப்படுகிறது(தாவர புரதங்களில் பிரித்தெடுகையில் வெளியிடப்படும் யூரிக் ஆசிட் கழிவின் அளவு மிக மிக குறைவாகும்,விலங்கு புரதங்களில் இவை மிக அதிகம்) , பின் இவை ரத்தத்தில் கலக்கப்பட்டு பின் கல்லீரல் அடைந்து பிறகு நமது கிட்னியால் இந்த அமிலம் ரத்தத்தில் இருந்து வடிகட்டப்பட்டு ,நமது சிறு நீர் மூலம் வெளியேறுகிறது..பொதுவாக சைவ உணவுகளை விட அசைவ உணவுகளைச் உண்ணும்போது 10 மடங்கு யூரிக் அமிலம் அதிகமாக கழிவாக வெளியேற்றப்படுகிறது . இதை வெளியேற்ற நம் கிட்னி மற்றும்
கல்லீரல் 5 மடங்கு அதிகமாக உழைக்க வேண்டும். ஒரு மணிநேரத்திற்கு சைவ உணவு உண்ணுவோர் கழிவாக வெளியேறும் யூரிக் அமிலத்தின் அளவு சராசரியாக 0.5 கிராம்தான். ஆனால் மாமிச புரதங்கள் எடுத்து கொள்வோர் ஒரு மணி நேரத்திற்கு வெளியேற்றும் யூரிக் அமிலத்தின் அளவு 2 கிராம்.
சரி யூரிக் ஆசிட்டா அது என்ன ? அது அதிகமானால் எனக்கு என்ன? எனக்கு சுகர் குறைந்து விட்டது ,எடை 20 கிலோ குறைந்து விட்டது, பத்து வயது குறைந்ததுபோல் தோற்றம் கிடைத்து விட்டது ,பக்கத்துக்கு வீட்டு பெண்கள் சைட் அடிக்கிறார்கள் என சொல்லி, பேலியோக்குமுன் ,பேலியோவுக்கு என புகைப்படம் எடுத்து கலக்கும் நம் பேலியோ கண்மணிகள் இன்னும் சில வருடங்களில் எப்படி சிறுநீரக டயாலிசிஸ் மாதமொருமுறை எடுக்க போகிறார்கள் என விளக்கமாக பார்ப்போம்?
சரி அதிக யூரிக் அமிலத்தை கழிக்கும் இந்த பியூரின் (purine ) மூலப்பொருள் அதிகமாக உணவு பொருளகள் என்ன என்ன ? பேலியோ டயட்டில் பரிந்துரைக்கப்படும் அனைத்து அசைவ உணவுகளும் பியூரின் அளவுகளை அதிகமாக கொண்டுள்ளவை தான் .இதனை உண்ணும்போது உங்கள் யூரிக் ஆசிட்ன் அளவு ரத்தத்த்தில் மிக உயரும்,சிறு நீர் கழித்தபின் குறையும்,ஒவ்வொரு அசைவ உணவு உண்ணும்போதும் இந்த ஏற்ற இற்க்கம் தொடரும். இள வயதுடையவர்களின் யூரிக் ஆசிட் அளவு அதிகமாகும் போது ,சிறுநீரகம் எளிதாக இதனை வெளியேற்றிவிடும் ,அதே 40 வயதை தாண்டியவர்களின் கிட்னி இதை வெளியேற்ற மிகுந்த சிரம படும்..இதில் வருத்தமான விஷயம் என்னவென்றால், கிட்னி 90% பாதிப்பு அடையும் வரை அதற்கான அறிகுறிகள் எதுவும் தெரியாது..ரத்தத்தில் யூரிக் ஆசிட்டின் அளவு 6.0 mg/dL குறைவாகவே இருக்க வேண்டும் ( 7.2 mg/DL அதிக பட்சமாக கொண்டிருக்கலாம் என ஆய்வுகள் சொல்கின்றன)..தொடர்ச்சியாக நம் யூரிக் ஆசிட் அளவுகள் அதிகமாக இருக்கும்போது முதல் கட்டமாக கவுட் ( gout ) எனும் நோயை தோற்றுவிக்கிறது, மூட்டுகள் வலி, சிறுநீரக கற்கள் போன்றவை இந்த கவுட்டின் அறிகுறிகள்..இன்னும் யூரிக் அசிட்டின் அளவுகள் அதிகமாகும்போது இரண்டாம் கட்டமாக ஹைபர்யூரிசெமியா ( hyperuricemia) எனும் நிலைக்கு செல்கிறது இது தான் கிட்னிக்கான அனைத்து நோய்களுக்கும் முதல்படி.இது ஒரு நோயல்ல , இது கிட்னியின் சிறிய நரம்புகள் அதிகம் பாதிப்படைந்துள்ளதை உணர்த்திடும் ஒரு நிலை..இதன் தொடர்ச்சியாக இன்னும் பேலியோ என்ற பெயரில் அதிகமான புரதங்களை தொடந்து எடுத்து கொள்ளும்போது அது சிறுநீரகத்தின் நரம்பு மண்டலத்தை கடுமையாக பாதித்து chronic kidney disease, kidney failure என்ற அடுத்தடுத்த நிலைக்கு எடுத்து செல்லும்.
விலங்கு புரதங்கள் மட்டுமல்ல ,தாவர புரதங்களை அதிகமாக எடுக்கும்போதும் கூட யூரியா போன்ற அதிக கழிவுகளால் கிட்னிக்கு மிக அதிக வேலைப்பளு தான்..அதிகபட்சம் 60 கிராம் புரதம் என்பது நமது உடலுக்கும் சிறுநீரகத்திற்கு மிக நல்லது..சரி நீங்கள் பேலியோ டயட்டில் உண்ணும் புரத அளவு என்ன?
காலை 4 முட்டை = 10கிராம் X 4 = 40 கிராம்
மதியம் 100 பாதாம் = 21 கிராம் ( 100 பாதாம் ஒரு நாளைக்கு ,அப்ப்பா ,தலை சுற்றுகிறது)
இரவு சிக்கன் கால் கிலோ = 67 கிராம்
ஒரு பேலியோ குழுவில் சராசரியாக 130 கிராம் புரதம் தினமும் பரிந்துரைக்கப்படுகிறது அதாவது உண்ணக்கூடிய அளவைவிட இரு மடங்கு . அதுவும் ஆசிய மக்கள் மேற்கத்திய நாட்டு மக்களை விட குறைந்த உயரமும் , குறைந்த உடல் பருமனும் கொண்டவர்கள் .அதனால் மேலை நட்டு மக்களுக்கு பரிந்துரைக்கும் அளவை விட மிக குறைந்த புரதங்களே எடுத்து கொள்ள வேண்டும்.அதனால் அளவான புரதங்கள் கொண்ட உணவை உண்போம்,நமது கிட்னியை பாதுகாப்போம்.
இந்த மக்களுக்கு இதற்கு முன் இருந்த உணவு முறையில் என்ன குறை?? அதிகமாக உண்பதை தவிர்த்து,சிறு தானியங்களை அதிகம் சேர்த்துகொண்டு,மாடி தோட்டம் அலலது இயற்கையான முறையில் விளைந்த காய்கறிகள் ,கீரை வகைகளை நன்கு உண்டு,வாரம் ஒருமுறை அசைவ உணவு ,இருமுறை முட்டை ,அந்தந்த காலங்களில் கிடைக்கும் அவர்கள் பகுதியில் விளையும் பழங்கள், நலன் உடல் பயிற்சி,யோகா ,நல்ல மன நலம் , போன்றவற்றால் இருக்கும் நோய்களை விரட்டி சிறப்பாக வாழ முடியும். அதைவிட்டு பேலியோ போன்ற குறுக்கு வழிகளில் உடல் எடை குறைத்து ,தற்காலிகமாக சர்க்கரை நோய் ,பிரஷர் போன்றவற்றிக்கு தீர்வு தேடினால் , உறுப்புகள் பழுதடைந்து மரணம் விரைவில் வீட்டு கதவை தட்டும் என்பதில் மாற்றமில்லை...

நிலக்கடலை உண்பது தவறா ? அது கான்சர் வரவழைக்குமா ???

இப்படி தான் போலியான செய்திகள் பேலியோ குழுக்களில் பரப்பப்படுகிறது. இதில் அபிளாடோக்ஸின் (Aflatoxins) எனப்படும் நச்சுப்பொருள் மிக அதிகமாக உள்ளது ,இதை உண்டால் கான்செர் வருவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம் என்று, இதனால் தைராய்டு சுரப்பிகள் அதிகமாக பாதிப்படையும் எனவும் கூறப்பட்டு வருகிறது... அபிளாடோக்ஸின் (Aflatoxins) என்பது சாதாரணமாக அனைத்து வகை கொட்டை மற்றும் தனிய வகைகளில் காணப்படுவது.இது லட்சத்தில் ஒருவருக்கு தடிப்புகள் போன்ற ஒவ்வாமை நோய்களை ஏற்படுத்தலாம்.இதனால் கான்செர் வரலாம் என்பது ஒரு அனுமானமே . இதுவரை ஒருவர் கூட அபிளாடோக்ஸினால் கான்செர் நோயினால் பாதிக்கப்பட்டதாக அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் இல்லை என அமெரிக்க உணவு மற்றும் மருந்து மேலாண்மை துறை( FDA) அறிவித்துள்ளது..நீங்கள் நன்றாக சிந்தித்து பாருங்கள், போன நூற்றாண்டில் நிலக்கடலை & நிலக்கடலை எண்ணெய் அதிகம் சேர்த்து ,எத்தனை மக்கள் தைராய்டு நோயினாலும் & கேன்சராலும் பாதிக்கப்பட்டு உள்ளார்கள்..
மாறாக தினமும் நிலக்கடலை ஒரு கைப்பிடி அளவு உண்டு வந்தால், கான்செர் ,மாரடைப்பு,நீரிழிவு போன்ற நோய்கள் வருவதற்கு வாய்ப்புகள் மிக குறைவு என ஆய்வுகள் தெரிவிக்கின்றன...இன்னும் நீங்கள் அபிளாடோக்ஸின் (Aflatoxins) என்பது ஒரு கான்செர் வரவழைக்கும் ஒரு பொருள் என எண்ணினால் , நீங்கள் பாதாம் சாப்பிடுவது கூட மிக தவறு தான். ஏனென்றால் ஒரு சில பகுதிகளில் விளையும் பாதாமில் அபிளாடோக்ஸின் அளவு மிக அதிகமாக உள்ளது, ஒரு சில நாடுகள் பாதாமை இறக்குமதி செய்யும்பொது அபிளாடோக்ஸின் அளவை சரி பார்த்தே, இறக்குமதிக்கு அனுமதிக்கிறது..குறிப்பாக ஐரோப்பிய யூனியன் 2007 முதல் அபிளாடோக்ஸின் அளவு பரிசோதிக்கப்பட்ட பாதாம்களை இறக்குமதி செய்கிறது. Reference (https://en.wikipedia.org/wiki/Almond)..உங்களுக்கு தெரியும் , தரம் குறைந்த பொருட்கள் எந்த நாட்டின் சந்தையில் புரளுமென்று.. அதனால் வெளிநாடுகளில் ஒருவர் உண்ணும் உணவு பொருளின் தரமும், நம் நாட்டில் கிடைக்கும் உணவு பொருளின் தரமும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் போன்றது. அதனால் வெளி நாட்டில் வசிக்கும் ஒருவர் பரிந்துரைக்கும் உணவுமுறைகள் அவருக்கு தற்காலிகமாக சரியான பலனை தந்து இருக்கலாம். ஆனால் நம் அனைவருக்கும் பொருந்தாது.
பாவம் நிலக்கடலையின் ஒரு கிலோ சந்தை மதிப்பு 100 ரூபாய் , அதே பாதாம் ஒரு கிலோ சந்தை மதிப்பு 700 ரூபாய். பேலியோ டயட்டில் பாதாம் தினசரி 100 கிராம் சாப்பிடுமாறு அறிவுத்தப்படுகிறார் ,அவர்கள் மாதம் சுமார் 2000 ரூபாய்க்கு பாதாம் மட்டும் வாங்க வேண்டும்.. வருடம் 25 ஆயிரம் ரூபாய் பெரும் பொருளாதார சுமை ,.அதுவும் தினசரி 100 பாதாம்கள் எடுப்பது , நிச்சயமாக இரண்டு வருடங்களில் உங்கள் கிட்னியை பாதிக்கும்.உலகின் மிக சிறந்த ஆரோக்கியமான உணவுப்பொருள்களில் ஒன்றான , குறைந்த விலை கொண்ட நிலக்கடலையை நாம் ஒதுக்கி நிலக்கடலையை விட குறைந்த சத்துக்கள் கொண்ட அதிக விலை கொண்ட பாதாமை நம் நாடி செல்வது கனி இருக்க காய் கவரும் செயலாகும்.
சிந்திப்பீர்,நல்லதை நாடி உண்பீர் ,நலமுடன் வாழ்வீர்..

பேலியோவும் மார்பக புற்றுநோயும் ?

சுமார் பத்து வருடங்களுக்கு முன் கோவா அரசு மருத்துவ கல்லூரியின் புற்றுநோய் பிரிவு நடத்திய மார்பக புற்றுநோய் குறித்த ஆராய்ச்சியில் ,பிராய்லர் கோழி உண்பது இந்த வகை கேன்சருக்கு முக்கிய காரணமாக கண்டுபிடிக்கப்பட்டது. கோழிகளுக்கு கொடுக்கப்படும் ஸ்டெராய்டு (steroid) மருந்துகளால் தான் இந்த பாதிப்பு உணடாகிறது எனவும் கூறப்பட்டது . இந்த கோழிகளை நீண்ட நாள் தொடர்ச்சியாக உண்பவர்களுக்கு , இந்த வகை கான்செர் வர வாய்ப்புகள் மிக மிக அதிக என இந்த ஆராய்ச்சியின் தலைவரான டாக்டர்.பின்டோ குறிப்பிடுகிறார்.. சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பே இது போன்ற பிராய்லர் சிக்கன் தீமைகள் குறித்த பல ஆராய்ச்சி முடிவுகள் வெளியிடபட்டன , ஆனால் பலகோடி ரூபாய் வர்த்தகம் கொண்ட இத்தொழிலை நிறுத்த முடியுமா?சிக்கன் உற்பத்தி நிறுவனங்கள் மீடியாக்களின் துணையுடன் இதை இருட்டடிப்பு செய்து விட்டன.. இது பற்றி பத்து வருடங்கள் முன்பு ஆனந்த விகடன்,குமுதம் போன்ற தமிழ் நாளிதள்கலிலும் பரபர பரப்பாக பல கட்டுரைகள் வந்தன.பின் அப்படியே அமுக்கப்பட்டுவிட்டது.நீங்கள் கூகிளில் (breast cancer + broiler chicken ) என டைப் செய்தால் எண்ணற்ற கட்டுரைகளை இது பற்றி இயலும்.
ஆனால் பேலியோ டயட் என்ற பெயரில், இந்த சிக்கன் உணவு தினசரி உணவாக (வேண்டிய அளவு ,தோலுடன் ) ஒரு குழுவில் பரிந்துரைக்கப்படுகிறது ..பாருங்கள் நாட்டுக்கோழி கிடைத்தால் நல்லதாம் ,இல்லை என்றால் பிராய்லர் கோழியே பரவாயில்லையாம்...மக்களுக்கு கிடைக்கும் தற்காலிக உடல் உபாதைகள் நிவாரணத்தை ,இவர்களின் பெரும் வெற்றியாக கொண்டாடி , மக்களின் உயிருடன் விளையாடி வருகின்றனர். இதற்கு பின்னால் இருக்கும் இவர்கள் வர்த்தக திட்டத்தை மக்கள் இப்போதே மெதுவாக உணர தொடங்கி விட்டனர்...
எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது .
எனும் வள்ளுவரின் வாக்குக்கு இணங்க, யார் என்ன சொன்னாலும் குருட்டுதனமாக பின்பற்றாமல் ,கொஞ்சமாவது ஆராய்ந்து செயல்படுங்கள்...

http://www.topnews.in/broiler-chicken-can-cause-breast-cancer-study-report-22332

நீரிழிவு பற்றி அகத்தியர் பாடல்...

மாமுனிவர் அகத்தியர் பற்றி நாம் அனைவரும் நன்றாக அறிவோம். சித்தர்களில் முதன்மையானயாராகவும் தமிழ் இலக்கணத்தை இயற்றியவராகவும் நம்மால் அறியப்படுபவர் . இவர் எழுதிய அகஸ்திய சம்ஹிதா (Agastya Samhita) மிகவும் பிரபலமானது ,இதில் மின்சாரம் மற்றும் பேட்டரி போன்றவற்றை தயாரிப்பது பற்றிய குறிப்புகள் இருப்பதாக பல்வேறு நாட்டு அறிவியல் அறிஞரால் கூறப்பட்டுள்ளது . இவர் மதுமேகம் எனும் நீரிழிவு தோன்றுவதற்கான காரணங்களாக இறைச்சி வகைகள்,பால்,நெய் போன்ற கொழுப்பு பொருள்களே காரணம் என்று கூறுகிறார்... இது மட்டுமல்ல, பெரும்பான்மையான தமிழ் மருத்துவ நூல்கள் கூறுவது தான். எதையும் சிந்திக்காமல் செய்யப்பட்டால்,பேலியோ போன்ற மாயைகளில் கிடைக்கும் சிற்றின்பத்தில் சிக்கி உயிரை பலியிட வேண்டியது தான். சிந்திப்பீர்..
கோதையர் கலவி போதை
கொழுத்தமீ னிறைச்சி போதைப்
பாதுவாய் நெய்யும் பாலும்
பரிவுட ணுன்பீ ராகில்
சோதபாண் டுருவ மிக்க
சுக்கில பிரமே கந்தான்
ஒதுநீ ரிழிவு சேர
உண்டென வறிந்து கொள்ளே'

அதிக பாதாம் ஆபத்து ??

பாதாம் ஒரு ஆரோக்கியமான கொழுப்பு, நார்ச்சத்து, புரதம், மெக்னீசியம் மற்றும் வைட்டமின் ஈ ஆகிவற்றை கொண்ட மிகவும் அருமையான கொட்டை வகை . ஆனால் அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பது போல 100 பாதாம் பருப்புகளை ஒன்றாக சாப்பிடுவது என்பது ,அதில் கிடைக்கும் நன்மைகளை விட தீமைகளை அதிகரித்து விடுகிறது. நாம் நீண்ட நாட்களாக அதிகமான பாதாம் உட்கொள்ளும்போது, அது உடலில் செலினும்( selinum) அளவை வெகுவாக அதிகரிக்கிறது.இது செலெனோசிஸ்( selenosis) எனும் நோய்க்கு வழிவகுக்கிறது. இதனால் அதிக முடி உதிர்வு, ஜீரண உறுப்புகளில் பாதிப்பு போன்ற விளைவுகளை உண்டாகும்..மேலும் தொடர்ச்சியாக இவ்வளவு அதிகமான புரோட்டீன் கொண்ட பாதாமை தினசரி 100 என உண்டு வந்தால், இரண்டு மூன்று ஆண்டுகளில் நிச்சயமாக அது நம் கிட்னியை பாதிக்கும்( இது பற்றி மேலும் அறிய (பேலியோவும் கிட்னி சட்னியும் என்ற கட்டுரையை படிக்கவும் ).நமக்கு இணையத்தில் இலவசமாக எண்ணற்ற தகவல்கள் கொட்டி கிடக்கின்றன.எனவே எந்த உணவு முறைகளையும் பின்பற்றினாலும், அதற்குமுன் , அது பற்றி சிறிதேனும் ஆராய்ச்சி செய்து பின் முடிவு செய்யவும்.. தினசரி 15-20 பாதம் பருப்புகள் உண்பது ஏற்கத்தக்கது...

prostate கான்சர்



பிராய்லர் கோழிகளை தோலுடன் உண்டால் தோலின்றி உண்பவரை விட கான்சர் வருவதற்கான வாய்ப்புகள் நான்கு மடங்கு அதிகம்..அதே போல்தான் வாரம் 5 முட்டைகளுக்கு உண்டால் , #prostate கான்சர் வருவதற்கான வாய்ப்புகள் பல மடங்கு அதிகம்.

You are being experimented. எச்சரிக்கை !!!

நண்பர்களே நீங்கள் ஆராய்ச்சி எலிகள் இல்லை என்பதை இப்போதாவது உணருங்கள்..முக நூலில் இயங்கும் சில பேலியோ குழுக்களில் உங்கள் மருத்துவ அறிக்கைகளை பதிவேற்றம் செய்யாதீர்கள். நீங்கள் உங்களுக்கும் அறியாமல் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டு கொண்டு இருக்கிறிர்கள்.. இதோ உங்களுடைய உடல் மாற்றங்கள் பேலியோவுக்கு முன் மற்றும் பின்பற்றிய மூன்று மற்றும் ஆறு மாத இடைவெளியில் உங்கள் உடல் பரிசோதனை ரிப்போர்ட்களை பதிவேற்றம் செய்ய சொல்கிறார்கள்.மக்களுக்கு சேவை செய்யும் ஆராய்ச்சி கட்டுரைகள் சமர்ப்பிக்க இந்த தகவல்கள் தேவை என்று சொல்கிறார்கள்.நம்ப வேண்டாம், இதற்கு பின்னால் மிக பெரும்சதி இருக்கிறது.. இந்த தகவல்கள் வைட்டமின் மாத்திரை தயாரிக்கும் மருந்து கம்பெனி ஒன்றுக்கு பெரும் தொகைக்கு வழங்க ஒப்பந்தம் போடபட்டு இருக்கிறது..

உயிர் வாழ பின்பற்ற தகுதி இல்லாத டயட்

ஆஸ்திரேலியாவின் உணவுமுறை அமைப்பின் தலைமை செயலர் (chief executive of the Dietitians Association of Australia, Claire Hewat) கிளாரி ஹெவாட் அவர்கள் பேலியோ டயட் எனபது முற்றிலும் நிருபனமற்ற ,புற்றுநோயை வரவழைக்க கூடிய டயட் என்றும் கூறியுள்ளார், மேலும் இது ஏதோ சில நாட்களிலேயே சில மந்திரஜாலங்கள் செய்தாலும் , நீண்ட நாள் உயிர் வாழ பின்பற்ற தகுதி இல்லாத டயட் எல்லாம் கூறியுள்ளார்.
http://www.smh.com.au/lifestyle/diet-and-fitness/nutritionists-warn-of-dangers-in-paleo-dieting-20140805-100iup.html

பேலியோ பின்பற்றும் மக்களுக்கு ஒரு கேள்வி?

பேலியோ டயட் மோகத்தில் நீங்கள் சிந்திக்க மறந்த ஒரு சிறு விஷயம்..ஏன் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் விவசாயம் கண்டுபிடிக்கபடாததற்கு முன்தான் மக்கள் ஆரோக்கியமாக வாழ்ந்தார்களா? அதுக்கு பிறகு யாருமே ஆரோக்கியமாக இல்லையா? நம் தாத்தாவின் தலைமுறையில் 80 ,90 வயதுவரை சாதாரணமாக ஆரோக்கியமாக வாழ்ந்தார்களே அவர்கள் எல்லாம் பேலியோ டயட் பின்பற்றியவர்களா? ...சர்க்கரை ,பிரஷர் ,கான்சர் எல்லாம் கடந்த 50 வருடங்களில் உண்டான நோய்கள் ( ஒரு சில மன்னர்களுக்கு ,பெரும் பணக்காரர்களுக்கு 100 வருடங்களுக்கு முன்னரே இவை வந்திருக்கலாம், அவை விதிவிலக்கு), இதை சரி செய்ய கடந்த 50 வருடங்களில் என்ன தவறு நடந்திருக்கிறது என்பதை ஆராய்ந்தால் போதும்,மிக எளிதாக கண்டறிந்து விடலாம்...
உங்கள் பாட்டியோ,தாத்தாவோ, அல்லது யாரேனும் 80 வயதை கடந்த பெரியவர்களை கண்டால்.அவர்களிடம் கேளுங்கள் அவர்களின் உணவு முறை எப்படி அவர்கள் காலத்தில் எப்படி இருந்தது,மாதத்தில் எத்தனை முறை அசைவஉணவுகள் எடுத்துக்கொண்டார்கள் ,அவர்கள் எடுத்த காய்கறிகள் ,பழங்கள் என்னென்ன? முடிந்தால் google -லில் South Indian food style at 1900s என்று தேடி பார்க்கவும்.. கிடைக்கும் மொத்த தகவலில் நாம் அறியும் என்றே ஒன்று, பெரும்பாலும் அவர்களின் முக்கிய உணவு சைவம் தான், வாரம் ஒரு முறை மட்டும் அசைவ உணவு. அதுவும் வருடங்களில் சில மாதங்கள் சுத்தமாக அசைவ உணவு இல்லை...
மேலும் அவர்களின் பெரும்பான்மையான உணவு களி,பால்,மோர் ,தயிர்,சோளம்,அரிசி சோறு போன்றவைகள் தான்...அதிக மாவு சத்து கொண்ட இந்த தானியங்கள் தான். பின் எப்படி அவர்கள் எப்படி நோயின்றி வாழ்ந்தார்கள்?

1.நல்ல  உடல் உழைப்பு
2.நல்ல உறக்கம் ( இரவு 8 மணி முதல்,காலை 5 மணி வரை )
3.கலப்படமற்ற உணவு பொருள்கள்  ,சிறு தானிய உணவுகள்
4.மன அழுத்தம் போன்ற  மன ரீதியான நோய்கள் இல்லாமை.

இதில் தான் நமக்கும், நமக்கு 50 வருடங்கள் முன் ஆரோக்கியமாக வாழ்ந்த மனிதர்களுக்கும் உள்ள முக்கிய வித்தியாசம்.ஆக தற்போதைய நோய்களை களைய ,மேற்கணட நான்கை  தான் நம் நடைமுறை வாழ்வில் நமக்கு தகுந்தாற்போல் மாற்றி அமைத்தாலே மிக எளிதாக நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழலாம்.இந்த முறை மிகவும் எளிமையானது ,இயல்பாக பசிக்கும்போது உணவு உணவுதல், தண்ணீர் சரியான அளவு குடிப்பது,தேவையற்ற குப்பை உணவுகளை தவிர்த்தல் , மன உளைச்சலை முழுதும் தவிர்த்தல் ,உடற்பயிற்சி,யோகா,மூச்சு பயிற்சி போன்ற சில வற்றை பின்பற்றல்,அவ்வளவே.

ஆனால் இந்த மக்கள்  இந்த முறையான எளிமையான செயல்கள் எதுவும் செய்ய தயாராக இல்லை.அவ்வளவு சோம்பேறிதனம் .இவர்களுக்கு வேண்டியது , ஒரே மாத்திரையில் அனைத்தும் சரியாவது போன்ற சதுரங்க வேட்டை தீர்வுகளே..3 வாரங்களில் 30 கிலோ குறைவது போன்ற மாயாஜால தீர்வுகள் தான்..காலையில் 30 நிமிடம் யோகா செய்ய சொன்னால் சோம்பல் படுகிறவர்கள் , ஏமாற்றுக்காரர்கள் எளிதில் கிடைக்காத எதையாவது உண்ண  சொல்லிவிட்டால், நாள் கணக்கில் நாயாய் அலைவார்கள் .. உதாரணமாக கெபிர் என்று ஒரு பொருள், இதில் நன்மை செய்யும் பாக்டிரியாவின்(probiotics) அளவு அதிகமாக இருகிறது,நமது ஊரின்  தயிர் போன்றது . குளிர் நாடுகளில் நோய் பரவும் வாய்ப்புகள்(குளிர்ந்த சூழ்நிலையில்,நுண்ணுயிரிகள் எளிதில் அழியாது) மிக அதிகம் ,எனவே குளிர் நாடுகளில் வசிப்பவர்கள்  அதிக probiotics உள்ள உணவு பொருள்களை  நோய் தொற்றை  தடுக்க அதிகமாக  எடுத்துக்கொள்வார்கள்.இது அங்கு வழக்கம்..,

இங்கு இந்தியாவில் தயிர், புளித்த மோர் போன்றவற்றில் நமக்கு தேவையான அளவு probiotics உள்ளது...ஆனால் இவர்களுக்கு கெபிரில் உள்ள probiotics மட்டுமே வேண்டும் என ஆடம் பிடிக்கிறார்கள், தயிர் ,மோர் வேண்டாமாம் .இந்தியா போன்ற வெப்ப நாடுகளில் இருப்பவர்களுக்கு கெபிரில்  இருக்கும் probiotics தேவையே இல்லை...நடு ஜாமத்தில் சுடுகாடு போகிறவன் தான் பேய்பிடிக்காமல் இருக்க கயிறு வாங்கி கட்டவேண்டும் ,ஆனால்  இங்கு  அனைவருமே கட்டி கொண்டு அலைகிறார்கள்..இதே கதை தான் ஓட்ஸ்க்கும்.  அமெரிக்காவில் வசிப்பவர்களுக்கு கெபிர் தேவை, ஆனால் மண்டையை பிளக்கும் வெயில் அடிக்கும் நாட்டில்( நுண்ணுயிரிகள் மட்டுமல்ல ,மனிதர்களே அடிக்கும் வெயிலில் 1000 பேர்ல் 2000 பிற என மடிகிறார்கள்) இருந்து கொண்டு , இதை  தேடி அலைவது , மிகவும் அறிவற்ற செயலாகும்...

வேண்டிய அளவு முட்டை ,(தரமற்ற)அசைவ உணவுகள் (மிக அதிக விலங்கு புரதம்), வேண்டியஅளவு கொட்டை வகைகள்(மிக அதிக புரத சத்து) ,மீன் ,நெய்..இவை தான் நோய்  தீர்க்கும் மருந்தா? இதை தொடர்ச்சியாக எடுத்தால்  நல்லதா ? இதற்கு பின் விளைவுகள் ஒன்றுமே இல்லை என்று நினைக்கிறீர்களா?

சரி பின் நல்ல டயட் என்ன?

வாரம் ஒருமுறை அசைவம் உண்ணுங்கள்.
வாரம் 3 முட்டை எடுத்து கொள்ளுங்கள்.
கடலை எண்ணெய்,தேங்காய் எண்ணெய் ,நல்லெண்ணெய் என வராமொருமுறை மாற்றி மாற்றி சமையுங்கள்.
தினம் ஒரு சிறு தனியா உணவு எடுத்து கொள்ளுங்கள்.(தினை,சோளம்,குதிரை வாலி,ராகி,கோதுமை)..சிறு தானியங்கள் மானாவாரியாக விளைவிக்க படுபவை,எனவே இதில் பூச்சி உரங்கள் என்ற ஒன்றும் இருக்காது. நிலக்கடலையும்  அவ்வாறே.
அரிசி உணவு வாரம் ஒருமுறை .
பசிக்கும்போது உணவு உண்ணுங்கள் ,தண்ணீர் மிக அதிகம் குடியுங்கள்.
உடலில் வெயில்படும்படி கொஞ்ச நேரமேனும் நில்லுங்கள்.
இரவு 8 மணி நேரம் உறங்குங்கள்.
மாடி தோட்டத்தில் காய்கறி வளர்த்து , மருந்தில்லா காய்கறி  உண்ணுங்கள் ..
முக்கியமாக உடல்பயிற்சி ,யோகா போன்றவை தவறாமல் காலை நேரம் 30 நிமிடம் செய்யுங்கள்.
6 மாதம் ஒருமுறை உடல் பரிசோதனை செய்யுங்கள் , அந்த மருத்துவ அறிக்கையை நீங்களே ஆராயும் அளவு  உங்கள் மருத்துவ அளவை கொஞ்சமாவது வளர்த்து கொள்ளுங்கள்..
எல்லா மதத்திலும் விரதம் என்ற முறை இருக்கிறது , அதை அவரவர் மதம் போல் பின்பற்றுங்கள்...

80 வயதுக்கு மேல் வாழ்ந்த பெரியவர் யாவரையும் கண்டால் அவரிடம்போய் டயட் கேளுங்கள்..அவர்கள் சொல்வது தான் உண்மையானது .

இவை அதிக செலவில்லாத  100 வருடங்களுக்கு முன் ஆரோக்கியமாக வாழ்ந்த நம் பாட்டன்களின் உணவு முறை...சிறிது முயற்சித்தால் எளிதாக இதை பின்பற்றலாம்.அதை விடுத்து நான் 10000 வருடங்கள் முன்னர் வாழ்ந்த குகை மனிதன் போல் உணவு உண்டு இந்த நோய்களை விரட்ட போகிறேன் , 100000 ஆண்டுகள் முன் வாழ்ந்த குரங்கு மனிதன் போல் மரத்தில் ஏறி வாழ போகிறேன் என்று கூறி திரிந்தால் , உங்களுக்காக அனுதாப படுவதைதவிர்த்து வேறுவழி இல்லை.. நம் கண் முன் வாழும் நம் தாத்தா பாட்டிகளின் வாழ்கையிலிருந்து பாடங்களை படிக்காமல், ஏதோ அமெரிக்க ஐரோப்பிய தீவுகளில் வாழும் ஆதி வாசி மக்களைபற்றிய கட்டுரை பற்றிய பாடங்களா தேவை நமக்கு??... உண்மை உணர்வோம். கவர்ச்சி விளம்பரங்களுக்கு பலியாகாமல் , ஆரோக்கியமாக வாழ்வோம்.

ஏன் சிவப்பு இறைச்சி கான்சர்வர முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது?

பேலியோ டயட் பின்பற்றுபவர்களுக்கு சிவப்பு இறைச்சி முக்கியமான டயட் ஆக பரிந்துரைக்க படுகிறது .ஆனால் பல்வேறு ஆய்வு முடிவுகள் ,ஆராய்ச்சிகள் மற்றும்,who (world health organization ) போன்றவை சிவப்புஇறைச்சி என்பது கான்சர் நோய் வர முக்கிய காரணி அது தவிர்க்க பட வேண்டும் என அறிவுறுத்த்துகிறது..புகையிலை ,ஆல்காஹால் வரிசையில் சிவப்பு இறைச்சியையும் WHO கடந்த ஆண்டு புற்று நோயின் முக்கிய காரண பொருளாக அறிவித்துள்ளது. ஏன் நம் முன்னோர்களின் முதன்மை உணவாக இருந்த இறைச்சி , மனித மூளை வளர்ச்சிக்கு அதிக புரதங்களை அளித்து பரிணாம வளர்ச்சியில் முதன்மையான உயிரினமாக நம்மை மாற்றிய இறைச்சி ஏன் இன்று நம்மை கொல்லும் ஆயுதமாக நம்முன் இருக்கிறது ?
இதற்கு முக்கிய காரணம் நம் இறைச்சிகளை சமைக்கும் முறை. சமைக்கும் முறையே இறைச்சி நமக்கு நல்லது செய்யபோகிறதா இல்லை நன்மை விளைவிக்க போகிறதா என்பதை தீர்மானிக்கிறது. கிரில்,பார்பிக்யூ, மேலும் அதிக வெப்பநிலையில் வாணலியில் இறைச்சியை சூடேற்றும்போதும் கெட்ரோசைகிலிக் அமின்ஸ் (Heterocyclic Amines) மற்றும் பாலிசைகிலிக் அரோமாட்டிக் ஹைட்ராகார்பன்ஸ் ( Polycyclic Aromatic Hydrocarbons) போன்ற கான்செர் காரணிகளை தோற்றுவிக்கிறது .
HA மற்றும் PAH போன்றவற்றை தவிர்க்க பின் வரும் முறைகளை பின்பற்றலாம்.
1. 150°C / 300°F வெப்பநிலைக்கு அதிகமாக சமைக்காதிருத்தல்.
2. தீயில் அதிகம் கருகிய இறைச்சி பாகத்தை உண்ணாதிருத்தல் .
3. இறைச்சி உண்ணும்போது எலுமிச்சை ஜூஸ் மற்றும் இஞ்சி உடன் எடுத்துக்கொள்ளுதல்.
4. இறைச்சியின் ஒரு பகுதியை அதிக நேரம் வேக விடாமல் ,அனைத்து பகுதிக்கும் சமமாக வெப்பம் கிடைக்கும்படி பார்த்து கொள்ளுதல்.
மற்றொரு முக்கிய காரணம் நாம் இறைச்சியின் தசை பகுதிகளை மட்டும் உண்ணுவது ,அவ்வாறு உண்ணாமல் தலை முதல் வால் வரை அனைத்து பகுதிகளும் சம அளவில் இருக்கும்படி இறைச்சிகளை எடுத்துக்கொள்ள வேண்டும் . தசை பகுதிகளை மட்டும் நீண்ட நாட்கள் எடுத்துக்கொண்டிருந்தால் அதில் அதிகமாக உள்ள அமினோ அமிலம் மேதினின் (methionine) பல்வேறு இன்னலை கொடுக்கும். எனவே nose to tail என்பது போல, அனைத்து பகுதிகளும் எடுத்து கொண்டு அனைத்து சத்துக்களும் சமநிலையில் கிடைக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.
அடுத்தது தொடர்ச்சியாக அதிகமான சிவப்பு இறைச்சி எடுக்கும்போது,உடலில் சேரும் அதிக படியான இரும்பு சத்து ஆண்களுக்கு பல உடல் உபாதைகளை உண்டாக்க வாய்ப்பு உள்ளது.பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் அதிகப்படியான இரும்பு சத்து வெளியேறிவிடும் வாய்ப்பு உள்ளது எனவே தொடர்ச்சியாக சிவப்பு இறைச்சி உண்ணும் ஆண்கள் , வருடம் 2 அல்லது 3 முறை ரத்த தானம் செய்து இதனை சரி செய்ய முடியும்.
முடிந்தவரை பதபடுத்தப்பட்ட இறைச்சியை தவிர்த்துவிட்டு,நல்ல தரமான இறைச்சியை நல்ல முறையில் சமைத்து அளவோடு உண்டு வளமுடன் வாழ்வோம்.