Thursday, October 20, 2016

ஏன் சிவப்பு இறைச்சி கான்சர்வர முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது?

பேலியோ டயட் பின்பற்றுபவர்களுக்கு சிவப்பு இறைச்சி முக்கியமான டயட் ஆக பரிந்துரைக்க படுகிறது .ஆனால் பல்வேறு ஆய்வு முடிவுகள் ,ஆராய்ச்சிகள் மற்றும்,who (world health organization ) போன்றவை சிவப்புஇறைச்சி என்பது கான்சர் நோய் வர முக்கிய காரணி அது தவிர்க்க பட வேண்டும் என அறிவுறுத்த்துகிறது..புகையிலை ,ஆல்காஹால் வரிசையில் சிவப்பு இறைச்சியையும் WHO கடந்த ஆண்டு புற்று நோயின் முக்கிய காரண பொருளாக அறிவித்துள்ளது. ஏன் நம் முன்னோர்களின் முதன்மை உணவாக இருந்த இறைச்சி , மனித மூளை வளர்ச்சிக்கு அதிக புரதங்களை அளித்து பரிணாம வளர்ச்சியில் முதன்மையான உயிரினமாக நம்மை மாற்றிய இறைச்சி ஏன் இன்று நம்மை கொல்லும் ஆயுதமாக நம்முன் இருக்கிறது ?
இதற்கு முக்கிய காரணம் நம் இறைச்சிகளை சமைக்கும் முறை. சமைக்கும் முறையே இறைச்சி நமக்கு நல்லது செய்யபோகிறதா இல்லை நன்மை விளைவிக்க போகிறதா என்பதை தீர்மானிக்கிறது. கிரில்,பார்பிக்யூ, மேலும் அதிக வெப்பநிலையில் வாணலியில் இறைச்சியை சூடேற்றும்போதும் கெட்ரோசைகிலிக் அமின்ஸ் (Heterocyclic Amines) மற்றும் பாலிசைகிலிக் அரோமாட்டிக் ஹைட்ராகார்பன்ஸ் ( Polycyclic Aromatic Hydrocarbons) போன்ற கான்செர் காரணிகளை தோற்றுவிக்கிறது .
HA மற்றும் PAH போன்றவற்றை தவிர்க்க பின் வரும் முறைகளை பின்பற்றலாம்.
1. 150°C / 300°F வெப்பநிலைக்கு அதிகமாக சமைக்காதிருத்தல்.
2. தீயில் அதிகம் கருகிய இறைச்சி பாகத்தை உண்ணாதிருத்தல் .
3. இறைச்சி உண்ணும்போது எலுமிச்சை ஜூஸ் மற்றும் இஞ்சி உடன் எடுத்துக்கொள்ளுதல்.
4. இறைச்சியின் ஒரு பகுதியை அதிக நேரம் வேக விடாமல் ,அனைத்து பகுதிக்கும் சமமாக வெப்பம் கிடைக்கும்படி பார்த்து கொள்ளுதல்.
மற்றொரு முக்கிய காரணம் நாம் இறைச்சியின் தசை பகுதிகளை மட்டும் உண்ணுவது ,அவ்வாறு உண்ணாமல் தலை முதல் வால் வரை அனைத்து பகுதிகளும் சம அளவில் இருக்கும்படி இறைச்சிகளை எடுத்துக்கொள்ள வேண்டும் . தசை பகுதிகளை மட்டும் நீண்ட நாட்கள் எடுத்துக்கொண்டிருந்தால் அதில் அதிகமாக உள்ள அமினோ அமிலம் மேதினின் (methionine) பல்வேறு இன்னலை கொடுக்கும். எனவே nose to tail என்பது போல, அனைத்து பகுதிகளும் எடுத்து கொண்டு அனைத்து சத்துக்களும் சமநிலையில் கிடைக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.
அடுத்தது தொடர்ச்சியாக அதிகமான சிவப்பு இறைச்சி எடுக்கும்போது,உடலில் சேரும் அதிக படியான இரும்பு சத்து ஆண்களுக்கு பல உடல் உபாதைகளை உண்டாக்க வாய்ப்பு உள்ளது.பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் அதிகப்படியான இரும்பு சத்து வெளியேறிவிடும் வாய்ப்பு உள்ளது எனவே தொடர்ச்சியாக சிவப்பு இறைச்சி உண்ணும் ஆண்கள் , வருடம் 2 அல்லது 3 முறை ரத்த தானம் செய்து இதனை சரி செய்ய முடியும்.
முடிந்தவரை பதபடுத்தப்பட்ட இறைச்சியை தவிர்த்துவிட்டு,நல்ல தரமான இறைச்சியை நல்ல முறையில் சமைத்து அளவோடு உண்டு வளமுடன் வாழ்வோம்.

No comments:

Post a Comment