Sunday, October 30, 2016

பேலியோடா....கான்சர்டா.....


அதிக புகை பிடித்தல் காரணமாக வாய் (oral,oesophageal cancer  ) மற்றும் உணவுகுழாய் புற்றுநோய் ஆகியவற்றில் இந்தியா முதலிடத்தில் இருந்தாலும் மற்ற புற்று நோய்களில் வகைகளில் (கல்லிரல்,கணையம்,மூளை,விதைப்பை,தோல்)  உலகின் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில்   இந்தியா ஏறக்குறைய கடைசி இடத்திலேயே  இருக்கிறது. இதற்கு முக்கிய காரணமாக கருதபடுவது நமது அன்றாட உணவில் பயன்படுத்தப்படும் மசாலா  பொருள்களும் , குறைவான அசைவ உணவுகளை கொண்ட   நமது அன்றாட உணவு பழக்கவழக்கங்கள் தான்.(https://www.ncbi.nlm.nih.gov/pubmed/14597785).



நம்மை அறியாமலேயே நாம் தினசரி உணவில் கடுகு,மஞ்சள்,சீரகம்,பட்டை,கிராம்பு,மிளகு,வெந்தயம்,மிளகாய் தூள் போன்றவற்றை நாம் எடுத்து கொள்வதுதான் , நாம் இந்த  பட்டியலில் கடைசியில் இருக்க காரணம். ரசம் , பொரியல்,குழம்பு என எது சமைத்தாலும் இந்த மாசாலா  பொருட்கள் கட்டாயம் இருக்கும். இதுவே நமக்கும் தெரியாமல்  நம்மை பலவகையான கான்சர் நோய்களிலிருந்து நம்மை காப்பாற்றி வருகிறது.  



ஆனால் இந்த தற்காலிக எடை குறைப்பு பேலியோ உணவுமுறை நமது அடிப்படை ஆணிவேரையே ஆட்டி பார்க்கும்  ஒன்றாக இன்று சில போலிகளால் உருவெடுத்து நிற்கிறது. இந்த பேலியோ உணவுமுறையில் இந்த மசாலா பொருள்கள் முற்றிலுமாக ஒதுக்கப்படுகிறது , சில சப்பை கட்டுகளுக்கு ,பசுமஞ்சள்,கெபிர் போன்றவை  ஊக்குவிக்கபடுகிறது . 1000 மடங்கு ஆக்ஜிசன் அதிகம் என்று புதியதாக பசு மஞ்சள் மார்க்கெட் வேறு . அறிவிலி மக்களுக்கு தாங்கள் உண்ணும் உணவில் உள்ள மஞ்சள் தூளிலுள்ள குறுகுமின் (curcumin) அளவே மிகவும் போதுமானது  என்பது தெரியாது. யாராவது ஒருவர் ஏதாவது  புதிதாக சொன்னால், அவர்கள் பின்னாலேயே சிறிதளவும் ஆராய்ச்சி இல்லாமல் ஓட வேண்டியது.. உறுதியாக சொல்ல முடியும் பேலியோ பின்பற்றும் 80 சவிகிதம் மக்கள், இன்னும் 2 அல்லது 3 வருடங்களில் புற்று நோயாளிகளாக இருப்பார்கள்.

இன்று #prostate cancer எனப்படும் விதைப்பை புற்றுநோய் மிக அதிகமாக நகர்ப்புற மற்றும் கிராமப்புற  மக்களிடையே அதிகமாக பரவலாக தென்பட ஆரம்பித்துள்ளது. இந்தியாவில் அனைத்து நகர்ப்புறங்களில் உள்ள பெரிய மருத்துவமனைகளிலும் prostate கான்சர்க்கு தனியாக பிரிவுகள் அமைக்கும் அளவு இந்த புற்று நோய் பரவி வருகிறது..முட்டையில் உள்ள கோலின் ( choline) என்ற பொருள் இந்த வகை புற்று நோய்க்கான மிக முக்கிய காரணியாக இருக்கிறது என பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. முட்டை அதிகமாக உண்டால் தற்காலிகமாக சர்க்கரை அளவு குறையும்,உடல் எடை குறைக்கலாம் ,ஆனால் பின் விளைவாக சில ஆண்டுகளில் புற்று நோயளிகளாக வாய்ப்புகள் மிக அதிகம்.

வாரம் 5 முட்டைகளுக்கு அதிகமாக உண்டாலே இந்த வகை கான்செர் வருவதற்கு வாய்ப்புகள் மிக மிக அதிகம் ,ஆனால் இந்த பேலியோ குழுக்களில் தினசரி 5 முட்டைகள் உண்ண மக்கள் அறிவுறுத்த படுகிறார்கள்.அதிக முட்டைங்கள் உட்கொள்ளும் வழக்கமே , இந்த விதைப்பை மற்றும் பிறவகை கேன்சருக்கு முக்கிய காரணம்.  இவர்கள் நிலைமையை இன்னும் சில வருடங்களில் என்னவாகும் என்று நினைத்து பார்த்தால், கண்ணீர் சிந்துவதை தவிர வேறு வழி இல்லை. எடை குறைக்க உயிர் இழக்கும் இந்த மடையர்களுக்கு கண்ணீர் சிந்துவதும் கூட வீண் தான். ஆனால் அவர்களை நம்பி இருக்கும் குடும்பம் தான் வருத்தத்திற்குரியது.

2 comments:

  1. Correct! Neenga than muttailayum kalapadamnu erangiteengale... appuram epdi edhellam varama erukkum.... Mela neenga sonna anaithayum saptu endha ketta palakkamum elladhavangaluku kooda than cancer varuthu... appo vera engayo thappu erukkunu thaane artham.. neenga mudhalla yosinga boss....

    ReplyDelete
  2. நியாண்டருக்கும் உனக்கும் என்ன வாய்க்கா தகறாறு அள்ளி வீசுறீங்க
    அன்புடன்
    பாலு

    ReplyDelete